கொரோனா நிதி உதவி அளித்த ஏ ஆர் முருகதாஸ்.! முதல்வரை நேரில் சந்தித்து கொடுத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் கட்ட அலை வீசுவதால் மக்கள் தற்போது இதில் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர் இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் தற்போது தீவிரம் எடுத்து உள்ளது அந்த வகையில் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கை அறைகள் ஆக்சிசன்  போன்றவற்றை தேவைக்கு ஏற்ப வைத்துள்ளதால் பணிகள் முன்பரமாக செயல்படுகின்றன இந்த நிலையில் கொரோனா நிதி தங்களால் முடிந்த அவர்கள் கொடுக்கலாம் என சமீபத்தில் முதல்வர் கூறியிருந்தார் இதனையடுத்து தொழிலதிபர்கள் பிரபலங்கள் பலரும் தன்னால் முடிந்த காசோலைகளை கொடுத்து வருகின்றனர்.

அப்படிக் கொடுக்கப்படும் காசோலைகளை வைத்து ஆக்சிஜனை உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை அறை அமைத்தல் ஆக்சிஜன் செறி ஊட்டம் இயந்திரங்கள் உயிர் காக்கும் மருந்துகள் தடுப்பூசிகள் போன்ற பலவற்றை நம்மால் வாங்க முடியும் என்பதால் பலர்  தற்போது கொடுக்க முன்வந்து உள்ளனர்.

அந்த வகையில் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜீத், திலீப் சுப்பராயன், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போன்றவர்கள் தன்னால் முடிந்த காசோலைகளை கொடுத்து வந்த நிலையில் தற்போது தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ ஆர் முருகதாஸ் அவர்களும் தன் பங்கிற்கு 25 லட்சம் கொரோனா நிதியுதவி அளித்துள்ளார்.

முதல்வரை நேரில் சந்தித்து இதை கொடுத்தார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version