இரண்டு டாப் ஹீரோக்களை வைத்து படம் பண்ண போகும் ஏ ஆர் முருகதாஸ்.. புடிச்சாலும் புடிச்சாரு புளியங்கொம்பா பார்த்து புடிச்சுட்டாரு.

தளபதி விஜய்யை வைத்து தொடர்ந்து அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்திவர் இயக்குனர் முருகதாஸ். முதலில் இவர் நடிகர் அஜித்தை வைத்து தீனா என்னும் திரைப்படத்தை கொடுத்திருந்தார் அதன்பிறகு ஏ ஆர் முருகதாஸ் சூர்யாவை வைத்து ஏழாம் அறிவு என்னும் மாபெரும் மிரட்டல் படத்தை கொடுத்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டார்.

அதனை தொடர்ந்து விஜயுடன் இணைந்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் ஆகிய படங்களை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படங்களும் மெகா ஹிட்டான அதனை தொடர்ந்து 4-வது முறையாக விஜயுடன் இணைவாரா பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் விஜய் ஏ ஆர் முருகதாஸ் நிராகரித்தார். அதற்கு முக்கிய காரணம் சர்க்கார் படத்தின் கதையை வேறு ஒருவருடையது எ

ன பிரச்சினை எழவே இனி முருகதாஸுடன் கைகோர்த்தால் நமக்கு பிரச்சனையாக அமைந்து விடுமோ என எண்ணி விஜயே மறுத்துவிட்டார். அதன்பின் பெரிய அளவு சினிமா உலகில் படங்களை இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விக்ரமிடம் கதைசொல்லியும் முதல் முறையாக இணைந்துள்ளனர்.

ஏ ஆர் முருகதாஸ் சொன்ன கதை விக்ரமுக்கு ரொம்ப பிடித்துப் போய் விட்டதாம் அந்த படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் விக்ரம் தற்போது கோப்ரா,  துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இதை முடித்து விட்டு ஏ. ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முருகதாஸ் விக்ரமுக்கு கதை சொன்ன உடனே அடுத்ததாக ஒரு கதையை விஜய் சேதுபதியுடன் சொல்லி உள்ளார் அந்த கதை அவருக்கு பிடித்து போயுள்ளதாம் இதனால் ஏ ஆர் முருகதாஸ் விக்ரம்,  விஜய் சேதுபதி ஆகியோர் அடுத்தடுத்த படம் பண்ண இருக்கிறார் இதனால் விட்ட இடத்தை பிடிக்க முடியும் என நம்பி உள்ளார்.

Leave a Comment