விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் அனுஷ்கா – சீரியல் நடிகை தகவல்.!

சினிமா உலகில் வெற்றி பெற ஒவ்வொரு நடிகையும் தனது திறமையும் அழகையும் காட்ட வேண்டிய அவசியம் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் நடிகை அனுஷ்கா தொடர்ந்து தனது அழகையும் திறமையும் காட்டி நடித்து தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

மேலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக மாறியதால்.. ஒரு கட்டத்தில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் அளவிற்கு முன்னேறினார். இதுவரை நடிகை அனுஷ்கா அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்தவர் மேலும் சோலோ படங்களிலும் நடித்து வந்தவர் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை ஏற்றினார்.

அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியாமல் இன்றுவரை அவர் தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறார். மேலும் வாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதால் அனுஷ்காவின் மார்க்கெட்டும் சரிவை நோக்கி போய்க்கொண்டே தான் இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அனுஷ்கா விஜய் டிவி தொலைக்காட்சியில் பல்வேறு விதமான சீரியல்கள் ஓடுகின்றது.

அதில் ஒரு சீரியல் தென்றல் வந்து என்னை தொடும் இந்த சீரியலை அனுஷ்கா தொடர்ந்து பார்த்து வருகிறார். இது குறித்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிகை பவித்ராவிடம் அவர் பேசி உள்ளார். அதனை பவித்ரா அவரது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் அது என்னவென்றால்.. நடிகை அனுஷ்கா தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலை பார்த்து வருகிறாராம்.

இந்த சீரியலுக்காக எங்களை பாராட்டி உள்ளார் அது எனக்கு மிகவும் உற்சாகமளித்தது மற்றும் என்னால் மறக்க முடியாத ஒரு தருணம் என தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிகை பவித்ரா பேசி உள்ளார். இவர் கூறிய இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பேசும் பொருளாக பார்க்கப்படுகிறது.

pavithra

Leave a Comment

Exit mobile version