தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்ட அனுஷ்கா.! ஒரு படத்தால் மொத்த வாழ்க்கையும் போச்சு…

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா தற்போது மார்க்கெட்டு இல்லாமல் இருப்பதற்கு இவர் தான் காரணம் என்று ஒரு பேச்சு சினிமா வட்டாரத்தில் அடிபட்டு வருகிறது. நடிகை அனுஷ்கா மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வந்த நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வந்தார்.

அதன் பிறகு தமிழில் விஜய், அஜித், சூர்யா, என வரிசையாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் அனுஷ்காவிற்கு போட்டியாக திரிஷா மற்றும் நயன்தாரா இறந்தனர். அந்த நேரத்தில் இந்த மூன்று நடிகைகளுக்கு மவுஸ் ஏரி இருந்தது ஆனால் அனுஷ்கா செய்த ஒரே ஒரு தவறால் மொத்த மார்க்கெட்டும் சரிந்தது.

அதாவது 2015 ஆம் ஆண்டு வெளியான இஞ்சி இடுப்பழகி என்ற திரைப்படத்தில் அனுஷ்கா தனது உலடலை அதிகரித்து நடித்திருப்பார். இதனால்தான் நடிகை அனுஷ்காவிற்கு மார்க்கெட் குறைந்தது என்று கூறப்படுகிறது. படத்தில் குண்டான தோற்றத்தில் நடிக்கும் படியான காட்சிகளும் இடம் பெற்று இருந்தன இதற்காக நடிகை அனுஷ்கா நிஜமாகவே குண்டாகி விட்டார்.

இந்த படத்திற்காக எடுத்த ரிஸ்க் தான் நடிகை அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையே மாறிப்போனது. அது மட்டுமல்லாமல் எத்தனையோ முறை உடல் எடையை குறைக்க முயற்சி செய்தும் எதிர்பார்த்த அளவிற்கு அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து ஏ எல் விஜய் இயக்க உள்ள ஆக்சன் படுத்திருக்காங்க தன்னால் உடல் எடையை குறைக்க முடியாததால் எடிட்டில் தன்னை ஸ்லிம்மாக மாற்ற வேண்டும் என அக்ரீமெண்டில் படக்குழுவினரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டார் என்று கூறப்படுகிறது. இப்படி இஞ்சி இடுப்பழகி என்ற ஒரு படத்திற்காக தனது சினிமா வாழ்க்கையை மொத்தமாக தொலைத்து விட்டு நிற்கிறார் நடிகை அனுஷ்கா.

Leave a Comment

Exit mobile version