சென்னையில் மீண்டும் தொடங்கிய அண்ணாத்த படப்பிடிப்பு : இப்போ யார் யார் கலந்து உள்ளனர் தெரியுமா வைரல் புகைப்படம்.

திரை உலகில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

60 வயதிற்கு மேல் ஆனாலும் ரஜினியை தனதுசினிமா  பயணத்தை நிறுத்தி கொள்ளாமல் இன்றளவிலும் நடித்து வருகிறார்

அந்த வகையில் டி. இமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் சிறுத்தை சிவா இயக்குகிறார்.

சூப்பர் ஸ்டாருடன் இணைந்து பழைய நடிகையான மீனா, குஷ்பு ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி உள்ளது மேலும் இவர்களுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

படத்தின் ஹூடிங் ஆரம்பத்தில் இருந்து மிக விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட வந்தாலும் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படத்தை தற்காலிகமாக நிறுத்தியது

அதேசமயம் ரஜினிக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லை என்பதால் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர் அன்றிலிருந்து சமீப காலம் வரையிலும் இந்த திரைப்படத்திற்கான சூட்டிங்கிற்கு மீண்டும் எப்போது தெரியாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது ரஜினி ரசிகர்களை  சந்தோஷப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கோலாகலமாக  படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது.

அதற்கு காரணம் தீபாவளிக்கு இந்த திரைப்படமும் அதிகாரபூர்வமாக வெளியாகும் என தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து அதிரடியாக அறிவித்து தான்

ஷூட்டிங்கு ரஜினியும் தலையசைத்து உள்ளதால் பட குழுவும் மிக ஆர்வத்துடன் எனது வேலையை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்டது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும்  சிவா ஆகியோர் சூட்டிங்கில் கலந்து கொண்டனர்

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் தட்டி தூக்கி வருகிறது.

Leave a Comment

Exit mobile version