ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் அஞ்சலி நடிக்கிறார் – அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து அசத்தி வருபவர் இயக்குனர் ஷங்கர். இவரது பட்ஜெட் இதுவரை 100 கோடிக்கும் குறையாமல் இருந்து வருகிறது அதேசமயம் அந்த திரைப்படங்கள் வெளிவந்து அதைவிட பல மடங்கு லாபத்தை பார்த்து உள்ளன.

இதனால் ரசிகர்களும், சினிமா பிரமுகர்கள் பலரும் ஷங்கரை பிரமாண்ட இயக்குனர் என செல்லமாக கூப்பிட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் இதுவரை இந்தியன், முதல்வன், ஜீன்ஸ் எந்திரன் 2.0, ஐ போன்ற பல்வேறு படங்களை இயக்கி வெற்றி கண்டார் கடைசியாக கூட இவர் கமலை வைத்து ஏற்கனவே பிரமாண்ட இந்தியன் படத்தை கொடுத்தார்.

அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க அதிக முனைப்புக் காட்டினார் ஆனால் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நாளிலிருந்து பிரச்சனைகள் வந்த வண்ணமே இருந்ததால் ஒரு கட்டத்தில் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தெலுங்கு பக்கம் தனது திசையை திரும்பினார் முதலாவதாக டாப் நடிகர் ராம்சரண் உடன் இணைந்து ஆர்சி 15 என்ற  தலைப்பில் ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படத்தில் ராம்சரணுடன் கைகோர்த்து கியாரா அத்வானி, ஜெயராஜ், சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து அசத்தி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை அஞ்சலியும் புதிதாக இணைந்துள்ளார்.

இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அஞ்சலில் இந்த படத்தில் வில்லியாக நடிப்பதால் படம் வேற லெவெலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment