ஷார்ட் ஹேர்.. சோடாபுட்டி கண்ணாடி.. கருப்பு சட்டையில் முதல் பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த அஞ்சலி.! காட்டுத்தீ போல் வைரலாகும் புகைப்படம்.

2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அஞ்சலி. இந்த திரைப்படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

அதன்பிறகு 2010ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். இப்படி இளம் நடிகையாக இருக்கும் பொழுது விருதுகளை பெற்றுள்ளார் அஞ்சலி அதுமட்டுமில்லாமல் தேவையான கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என கருதப்பட்டவர்.

மேலும் தமிழில் எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரெட்டச்சுழி, தூங்காநகரம் மகாராஜா, என பல திரைப்படங்களில் நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் பலூன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். கடைசியாக நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார் அஞ்சலி, மேலும் தற்போது சில திரைப்படங்களில் நடித்துவருகிறார். ஆனால் ஊரடங்கு காரணமாக எந்த ஒரு படப்பிடிப்பும் நிகழவில்லை.

ஆனால் இடையில் ஒரு காலகட்டத்தில் அஞ்சலிக்கு பட வாய்ப்பு அமையாததால் ஹைதராபாத் சென்று குடியேறினார், தமிழில் நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்து வந்தார் பின்பு சிங்கம் 2 திரைப்படத்தில் ஒரு குத்து பாடலுக்கு மட்டும் நடனமாட விட்டு சென்றார்.

இந்த நிலையில் மேலும் எப்படியாவது பட வாய்ப்பை பெற்று விட வேண்டும் என அடிக்கடி சமூகவலைதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் அஞ்சலி கருப்பு நிற உடையில் கண்ணாடி போட்டுக்கொண்டு சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

yours_anjali
yours_anjali
yours_anjali
yours_anjali
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment