இதனால்தான் சன் டிவிக்கு குட் பாய் சொல்லிவிட்டு விஜய் டிவிக்கு வந்தீங்களா.! ரசிகர்களின் கேள்விக்கு அனிதா சம்பத் அதிரடி பதில்.

விஜய் தொலைக்காட்சி ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள்.  அதுமட்டுமில்லாமல் TRP பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதற்காக ஏதாவது ஒரு புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப அதன் மூலம் தங்களுடைய டிஆர்பி ஏற்றிக் கொள்கிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 4 முடிவடைந்தது.

இந்த சீசனில் பல போட்டியாளர்கள் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார்கள் அதுமட்டுமில்லாமல் பல போட்டியாளர்களை ரசிகர்கள் மோசமாகவும் விமர்சித்தார்கள் அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்களை மோசமாக விமர்சித்தார்கள். அந்த லிஸ்டில் அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா சம்பத், சம்யுக்தா. ஆகிய போட்டியாளர்களை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு மோசமாக விமர்சித்தார்கள் அது மட்டுமல்லாமல் அவர்களை மட்டும் விமர்சிக்காமல் அவரது குடும்பத்தையும் விமர்சித்தார்கள் இது அவர்களை பெரிய அளவு பாதித்துள்ளது.

அதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகு பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு வீட்டை விட்டு வெளியேறிய அனிதா அவரின் தந்தை காலமானது அவரை பெரிதாக பாதித்தது. அதன்பிறகு பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு அப்பாவின் இறப்பு சமூக வலை தளத்தில் வெளியான விமர்சனம் என அனைத்தும் அவருக்கு வேதனையை கொடுத்ததாக ஆரி  இடம் கூறினார்.

இந்த நிலையில் சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பும் ரசிகர்களுக்கு பதிலளித்து வருகிறார் அந்த வகையில் ரசிகர் ஒருவர் செய்தி வாசிப்பை ஏன் விட்டு விட்டீர்கள் நீங்கள் தான் எப்பொழுது நம்பர் ஒன் மீண்டும் நீங்கள் செய்து வாசிப்பாளராக வரவேண்டும் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் அதற்கு பதிலளித்த அனிதா சம்பத் யாரும் என்னை தூக்க வில்லை.

முதலில் நான் பாலிமர் தொலைக்காட்சியில் பணியாற்றினேன் அதன் பின்னர் நியூஸ்7 தமிழ் அதன் பிறகு சன் டிவி என பணியாற்றி வந்தேன் அந்த சேனலில் இருந்து விலகுவது என்னுடைய விருப்பம். எப்படி மற்ற துறைகளில் மாற்றங்கள் செய்கிறார்களோ அதே போல் நான் என்னுடைய அடுத்த தேர்வு விஜய் தொலைக்காட்சி ஆக இருக்கிறது நான் எனக்கு கிடைக்கும் மற்ற வாய்ப்பை அனுபவிக்க விரும்புகிறேன் அதனால்தான் செய்தி வாசிப்பதை நிறுத்தி விட்டேன்.

எனக்கு எப்பொழுது சவுகரியமாக இருக்கிறதொ அப்பொழுது கண்டிப்பாக செய்தி வாசிப்பாளராக சேர்ந்து விடுவேன் என கூறியுள்ளார் இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

anitha sambath
anitha sambath

Leave a Comment