இதனால்தான் அவர் இரண்டு நாளாக சாப்பிடாமல் இறந்துள்ளார்.! தனது தந்தை இறப்பிற்கான காரணத்தை கூறிய அனிதா.!

செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் அனிதா சம்பத், இவர் தந்தை காலமாகியுள்ளார் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் தந்தை ஆர்.சி சம்பத் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.  அதேபோல் அனிதாவின் தாய் பத்திரிக்கையாளராக வார இதழ்களில் பணியாற்றி வந்தார்.

தமிழில் பிரபல வார இதழில் இவரின் கட்டுரைகள் வெளியாகி உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், அதேபோல் இவரின் எழுத்துக்களில் அதிக நகைச்சுவை இருக்கும் என்பதும் குறிப்பிடதக்கது.

அனிதா சம்பத் கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேடையில் ஆர்.சி சம்பத் பற்றி கமலே பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும் இந்த நிலையில் அனிதாவின் தந்தை மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். தரிசனத்திற்காக தன்னுடைய மகனுடன் சீரடி சென்ற ஆர்.சி சம்பத் திரும்பி வரும் வழியில் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

அதனால் அவரின் உடல் பெங்களூரில் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. இதில் என்ன ஒரு கொடுமை என்றால் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து ஓரிரு தினங்கல் தான் ஆகிறது அதற்குள் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது அனிதாவை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

அனிதா வீட்டில் இப்படி ஒரு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது அவர்கள் குடும்பத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் தன்னுடைய தந்தை மறைவு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியதாவது வயது முதிர்ச்சி காரணமாக திடீரென்ற மரணம் அடைந்துள்ளார் எனது தந்தை அவருக்கு வயது 62. அவர் இல்லை என்பதை தற்பொழுது என்னால் நம்ப முடியவில்லை இறுதியாக நான் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோதுதான் சந்தித்தேன் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்தவுடன் அவர் சீரடி சென்றிருந்தார் அதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

anitha
anitha

இன்று அதிகாலையில் 8 மணி அளவில் சிரடியில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த பொழுது ஆந்திராவிற்கு அருகில் அவர் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான சேதியை நான் கேட்டேன் அவர் நாளை சென்னை வந்த அடைந்திருக்க வேண்டும், அவர் உயிரோடு இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

இதனை என்னால் நம்பமுடியவில்லை அப்பா வீட்டிற்கு நடந்து வரணும் உங்கிட்ட நிறைய பேசணும் உன் குரலைக் கேட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது தெரிஞ்சிருந்தா முன்னாடியே வெளியே வந்திருப்பேன் அப்பா கூட கொஞ்சநள் இருந்திருப்பேன் விஜய் டிவி ஷோ எப்ப வேணாலும் திரும்பி வரும் ஆனால் அப்பா இனி திரும்பி வர மாட்டாரு இந்த வாரம் சேவாகி இருந்தால் கடைசியாக கூட அப்பாவை பார்த்து இருக்க முடியாது.

வாழ்க்கை என்பது மிகவும் கணிக்க முடியாத ஒன்று இங்கே அனைத்தும் ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது உங்களின் பெற்றோர்களை மிகவும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். அவரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் எனக்கு மிகவும் தர்மசங்கடமாக இருக்கிறது என உருக்கத்துடன் பதிலளித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த பதவியில் தன்னுடைய தந்தை இறந்ததற்கான காரணத்தையும் கூறியுள்ளார் அதில் அவர் கூறியதாவது என்னுடைய தந்தைக்கு அல்சர் இருந்ததாகவும் அவர் வயது முதிர்ச்சி காரணமாக தான் இறந்தார் எனவும் அவர் இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடவில்லை எனவும் கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார் அனிதா சம்பத்.

Leave a Comment