கொரோனாவால் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் எடுத்த அதிரடி முடிவு!! இனையதலத்தில் கதறும் ரசிகர்கள்!!

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் அனிதா சம்பத். இவரின் அழகை பார்ப்பதற்காகவே சன் டிவி தொலைக்காட்சியின் செய்தியை மக்கள் பார்க்கிறார்கள். அந்த அளவுக்கு இவருக்கு இல்லதரசிகள், டீன் ஏஜ் பெண்கள், மற்றும் இளைஞர் என இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளனர். மேலும் இவருக்கு சினிமா வாய்ப்பு அதிகமாகவே வந்தது. ஆனால் இவர் அதை மறுத்து வந்தார். அதன்பின் சினிமாவிலும் இவர் செய்தி வாசிப்பாளராக நடிக்க ஆரம்பித்தார்.

இதனைதொடர்ந்து இவர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் இவர் சர்க்கார், எந்திரன் 2,  காப்பான் போன்ற படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் திடீரென திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்பொது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் அனிதா சம்பத் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் தனது நலம் விரும்பிகளின் அறிவுறுத்தலின் படி வீட்டிலுள்ளோர் நலன் கருதி இன்றிலிருந்து பத்து நாளைக்கு விடுப்பு எடுத்து உள்ளேன் என்று கூறியுள்ளார். ஆனால் பத்து நாட்களுக்கு செய்திகளில் வரமாட்டேன் என்றும் மேலும் இது ஒரு முன்னெச்சரிக்கை என்றும் கூறியுள்ளர்.

மேலும் அவரை பார்க்க வேண்டுமென்றால் 11 மணிக்கு அனிதா சம்பத் விளாக் என்ற யூடியூப் சேனலில் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.தற்போது அந்த செய்தி இனையதலத்தில் வைரலாகி வருகிறது.

anitha
anitha

Leave a Comment