பிரபல சீரியலில் என்ட்ரி கொடுக்கும் அனிதா சம்பத்..! என்னடாது செல்லத்துக்கு வந்த சோதனை..

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பின் தனது திறமையை வளர்த்துக்கொண்டு ஒரு கட்டத்தில் சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார் அனிதா சம்பத். ஆரம்பத்தில் அங்கேயும் செய்தி வாசிப்பாளராக தென்பட்டு கொண்டிருந்த நடிகை அனிதா சம்பத் ஒரு கட்டத்தில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

இதன் மூலம் பிரபலமடைந்த இவர் பிறகு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தனது திறமையை அங்கு காட்டினார் அவரால் டைட்டில் வின்னர் என்ற படத்தை பெற முடியவில்லை என்றாலும் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகின.

வெளியே வந்து அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பல பட வாய்ப்புகள் கிடைத்தன. தொடர்ந்து சின்னத்திரை வெள்ளித்திரை என ஓடினார். குறிப்பாக  விஜய் டிவி தொலைக்காட்சியில் மீண்டும் இவர் பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சிகளில் சிறப்பாக நடனமாடி வெற்றி பெற்றார் அதன் மூலமும் அவருக்கு நல்ல காசு வந்தது தற்பொழுது தொடர்ந்து சூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் அனிதா சம்பத்..

திடீரென சின்னத்திரையில் சீரியல் பக்கம் தாவி உள்ளார். அதுவும் பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் தொலைக்காட்சியில் மிக சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் மந்திரப்புன்னகை.. இந்த சீரியல் இல்லத்தரசிகளையும் தாண்டி ரசிகர்கள் மற்றும் காதல் ஜோடிகளையும் வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.

இப்படி சிறப்பாக ஓடி கொண்டு இருக்கும் இந்த சீரியலில் தான் அனிதா சம்பத் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  வெள்ளி திரையில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நீங்கள் இந்த திடீரென ஏன் சின்னத்திரை பக்கம் தாவி உள்ளீர்கள் என கேட்டு வருகின்றனர்.

Leave a Comment

Exit mobile version