திடீரென சம்பளத்தை உயர்த்திய அனிருத்..! எத்தனை கோடிகள் தெரியுமா.? முழி பிதுங்கி நிற்கும் தயாரிப்பாளர்கள்..!

தமிழ் சினிமா உலகில் இருக்கும்  டாப் நடிகர், நடிகைகள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடுகின்றனர். அதன் காரணமாக தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றவர்கள்.

தற்போது ஒரு படத்திற்கு குறைந்தது 100 கோடி கட்டப்பட்ட சம்பளம் வாங்குகிறார்கள். இது தயாரிப்பாளர்களுக்கு பயத்தை காட்டுகிறது என்று பார்த்தால் இசையமைப்பாளர்களும் தற்போது சம்பளத்தை உயர்த்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத். தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது டாப் ஹீரோ படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இவர் இசையமைக்கும் படங்களும் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றி பெறுகின்றன மேலும் அந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல், தீம் மியூசிக் போன்றவைகள் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது. அதேபோல இப்பொழுதும் பல்வேறு டாப் ஹீரோ படங்களுக்கு இசையமைத்து  வருகிறார்.

அந்த வகையில் அனிருத் கையில் ஜூனியர் என்டிஆர் 30, ஜவான், இந்தியன் 2, ரஜினியின் ஜெயிலர் மற்றும் மலையாள படம் ஒன்றிக்கும்  இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அனிருத் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறார்.

அதன்படி பார்க்கையில் தற்போது பெரிய படங்கள் என்றால் தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி கேட்கிறாராம் சின்ன படங்கள் என்றால் சற்று குறைத்து சம்பளத்தை குறைத்து வருவதாக கூறப்படுகிறது. இது தயாரிப்பாளர்களுக்கு இன்னும் குடைச்சலை கொடுக்க ஆரம்பித்து உள்ளதாம்..

Leave a Comment