அவள் தவறான பொருளை எடுத்து விட்டாள்.! சித்ரா குறித்து மேடையிலேயே மனம் நொந்து பேசிய தொகுப்பாளினி டிடி.! வீடியோ உள்ளே

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்து வந்த சித்ராவின் மரணம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வந்தது பாண்டியன் ஸ்டோர் சீரியல் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் அவர்களுக்கு பிடித்த ஜோடி என்றால் கதிர் மற்றும் முல்லை  ஜோடி தான் இந்த சீரியலில் கதிராக குமரனும் முல்லையாக சித்ராவும் நடித்து வந்தார்கள்.

இந்த சீரியலில் முல்லையாக நடித்து பல இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் சித்ரா. ஒரு காலகட்டத்தில் சித்ரா ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்டார் இந்த விவகாரத்தில் அவர் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார் இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது. அதுமட்டுமில்லாமல் யார் முல்லையாக நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஒரு தரப்பு கருத்துக்களும் கூறினார்கள்.

இந்தநிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த காவியா நடிக்க ஆரம்பித்தார் முதலில் காவியாவை முழுமையாக ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் மறுத்தாலும் போகப்போக முல்லையாக மாறிவிட்டார் இருந்தாலும் சித்ராவை ரசிகர்கள் இன்னும் மிஸ் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் சித்ராவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விருது விழாவில் பேசிய தொகுப்பாளினி டிடி ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தவறுதலாக ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்து விட்டால் அதை யோசிக்காமல் கீழே வைத்து விடுங்கள் அவன் என்ன சொல்வான் இவள் என்ன செய்வாள் இவள் என்ன பேசுவார் என யோசிக்காதீர்கள் என்று உருக்கத்துடன் பேசினார் டிடி.

Leave a Comment