அன்புடன் குஷி சீரியலில் இருந்து இதற்காகத் தான் வெளியேறினேன் உண்மையை கூறிய ரேஷ்மா.!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக  விஜய் டிவி இல்லதரசிகள் மற்றும் முதியவர்களுக்கு பிடித்த வகையில் குடும்ப கதைகளை மையமாக வைத்தும் அதோடு இளசுகள்  விரும்பும் வகையில் காதல் காட்சிகள் போன்றவற்றையும் வைத்து சீரியல்களை இயக்குவதால் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று ஹிட் அடித்து வரும்  சீரியல் தான் அன்புடன் குஷி.  இந்த சீரியல் பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமான காட்சிகள் இடம் பெற்றதால் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.

இந்த சீரியலில் ஹீரோவாக பல சீரியல்களில் நடித்து கலக்கி வரும் பிரஜின் இந்த சீரியலிலும் ஹீரோவாக நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக முதலில் புதுமுக நடிகை ஒருவர் அறிமுகமானார். அந்த நடிகையும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

ஆனால் ஏன் என்று தெரியவில்லை இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். இவருக்கு பதிலாக ரேஷ்மா வெங்கடேஷ் என்ற நடிகை நடித்து வந்தார். இவர்தான் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

அதோடு இந்த சீரியலும் டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வளரத்தொடங்கியது. ஆனால் திடீரென்று இவர் விலகி தற்பொழுது கலர்ஸ் தமிழ் சீரியலின் மூலம் பிரபலமடைந்த ஸ்ரேயா தற்பொழுது குஷி கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரேஷ்மாவின் ரசிகர்கள் ஏன் இந்த சீரியலில் இருந்து விலகினார்கள் என்று சில காலங்களாக கேட்டு வந்தார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் ரேஷ்மா யாரும் ஒரு நல்ல வாய்ப்பை விட்டு விட்டுப் போகவேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனால்தான்  இந்த சீரியலில் இருந்து விலகினேன் என்று கூறியுள்ளார்.

Leave a Comment