21 வயதில் 12 வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்ட நடிகை.! இப்ப புலம்பி என்ன பயன் என்று கூறும் ரசிகர்கள்…

சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலான நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் வாய்ப்பு தான். திருமணம் செய்து கொண்டால் சரியாக பல நடிகைகள் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் திருமணம் செய்து கொண்டும் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.

அப்படி தன்னுடைய 21 வயதில் திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை ஒருவர் இன்றும் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அப்படி இருந்தும் இவருடைய கணவரை பலர் தாத்தா என கேலி செய்திருக்கிறார்கள் இதனால் அந்த நடிகை பொங்கி எழுந்திருக்கிறார் அந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

அதாவது மெட்டிஒலி, ராஜா ராணி, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி இவர் தனது 21 வயதில் தன்னைவிட 12 வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து நடிகை நீலிமா ராணி தனது கணவர் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் தாத்தாவை திருமணம் செய்து கொண்டிர்களே என்று கேலி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை நீலிமா ராணி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் விருப்பப்பட்டு தான் தன்னுடைய கணவரை திருமணம் செய்து கொண்டேன் இன்றுவரையிலும் நாங்கள் சந்தோஷமாக தான் இருக்கிறோம்.

ஆனால் தன்னுடைய கணவரை தாத்தா என்று கேலி செய்கிறார்கள் அதையெல்லாம் கண்டு கொண்டால் வாழ முடியாது யாராவது எதையாவது கேலி செய்து விட்டு போகிறார்கள் கடைசியில் அவர்களுக்கும் அது திரும்பும் என்று நடிகை நீலிமா ராணி கொந்தளித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து நடிகை நீலிமா ராணி தற்போது 30 வயதை எட்டியுள்ள நிலையில் தற்போது ஆகஸ்ட் 16 1947 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment