மணிரத்தினத்திற்காக அரசு வேலையை தூக்கி எறிந்த நடிகர்.! அட இந்த நடிகரா என அதிர்ச்சியான ரசிகர்கள்.?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் மணிரத்தினம் இவர் இயக்கத்தில் உருவாகும் அனைத்து படங்களும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது இதனாலேயே இவருடைய படத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று பல நடிகர் மற்றும் நடிகைகள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் மணிரத்தினம் படத்தில் நடிக்க வேண்டும் என்று அரசாங்க வேலையை தூக்கி எறிந்து விட்டு மணிரத்தினம் படத்தில் நடித்திருக்கிறார். இந்த தகவல் வெளியானதும் ரசிகர்கள் அதிர்ச்சியில் அந்த நடிகர் யார் என்று தேடி வருகிறார்கள்.

அதாவது கடந்த 2000ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்றுவரையிலும் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் பிரமிட் நடராஜன். இவர் இதற்கு முன்பே பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அலைபாயுதே திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனை திரைப்படம் ஆக அமைந்தது.

அதன் பிறகு பிரண்ட்ஸ், சமுத்திரம், அழகி, சார்லி சாப்ளின், துள்ளுவதோ இளமை, சொல்ல மறந்த கதை, வில்லன், எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகர் பிரமிட் நடராஜன். இப்படி பல திரைப்படங்களில் பிசியாக நடித்த பிரமிட் நடராஜன் தன்னுடைய அரசாங்க வேலையை தூக்கி எறிந்து விட்டார். இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் சினிமாவிற்காக அரசாங்க வேலையவே தூக்கி எறிந்து விட்டார் என்று அதிர்ச்சியுடன் கூறி வருகிறார்கள்.

இவர் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் எட்டுப்பட்டி ராசா, லவ் பேர்ட்ஸ், சங்கமம், பிஸ்தா, ரிதம், போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment