அமிதாப் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யாராய் அவரின் மகளுக்கும் கொரோனா.! அதிர்ச்சியில் ஆடிப்போன பாலிவுட் ரசிகர்கள்.!

சைனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு பல நாடுகளும் பல ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள். ஆனாலும் இன்னும் வைரசை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது அதுவும் பாலிவுட்டில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பல பிரபலங்கள் பல நாடுகள் விழிப்புணர்வு செய்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் சமூகவலைதளத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள் அதனால் இந்தக் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்ததால் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் படி அரசாங்கம் கூறி விட்டது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது, இந்த இருவரும் மும்பையில் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள், அவர்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கும் அவரின் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, தற்பொழுது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

aishwarya rai
aishwarya rai

இந்த நிலையில் பாலிவுட் ரசிகர்கள் மட்டுமலலாமல் தமிழ்நாடு மும்பை டெல்லி என பல மக்களும் இவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அவர்கள் எப்படியாவது மீண்டும் வரவேண்டும் என கூறுகிறார்கள்.

Leave a Comment