இறந்த அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அமலா பால் செய்த செயல்.! பாராட்டும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அமலா பால் தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் செய்திருக்கும் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அமலா பால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவிற்கு சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால் தன்னுடைய முதல் படத்தில் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தார். இந்த படத்தினை தொடர்ந்து மைனா, தெய்வ திருமகள், வேட்டை உள்ளிட்ட பல திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றினை தந்தது. முக்கியமாக விஜய் நடிப்பில் வெளிவந்த தலைவா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.

சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிகளை சந்தித்து வந்த அமலாபால் திடீரென இயக்குனர் ஏ.எல் விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் குறைவான காலங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

விவாகரத்திற்கு பிறகு கிளாமரில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வரும் இவர் ஆடை உள்ளிட்ட தொடர்ந்து சர்ச்சை கூறிய திரைப்படங்களில் நடித்து பல பிரச்சனைகளை சந்தித்தார். இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால் தனது தாயார் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய நினைவாக மரக்கன்று ஒன்றை நட்டு உள்ளார்.

amala paul
amala paul

இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து தனது அம்மாவின் பிறந்தநாளில் அவரது அருகில் இருக்க முடியாவிட்டாலும் அவரது நினைவாக இந்த மரத்தை நடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது அம்மாவை தான் மிகவும் நேசிப்பதாகவும் அவருக்கு தனது இனிமையான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். எனவே ரசிகர்கள் அமலாபாலின் அம்மாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment