சித்ரா கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நான் நடிக்கிறேனா.? இதோ அந்த நடிகை வெளியிட்ட பதிவு..

vj chitra:விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் ஒன்று,  இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே சித்ரா.

இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்,  இவர் தற்கொலை செய்து கொண்ட பொழுது இவரின் வருங்கால கணவர் அதே ஹோட்டலில் தான் இருந்துள்ளார் ஆனாலும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது.

சித்ராவின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என போலீசார் கூறுகிறார்கள்,  அது மட்டுமில்லாமல் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் வருங்கால கணவர் ஹேம்நாத் மற்றும் சித்ராவின் தாயார் என போலீசார் கூறி உள்ளார்கள்.

இவர்கள் இருவரும் அதிக அழுத்தம் கொடுத்தால் தான் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் எகிறிக் கிடக்கிறது.

இந்த நிலையில் பிரபல ஆயுத எழுத்து சீரியளில் புகழ் பெற்ற சரண்யா நடிக்க இருப்பதாக தகவல் வந்தது.

இதனைக் கேள்விப்பட்ட சரண்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் விஜே சித்ரா கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகையாளும் அந்த இடத்தை நிரப்ப முடியாது என அதிரடியாக தனது கருத்தை கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment