ஹீரோயின் லெவலுக்கு சம்பளத்தை உயர்த்தி கொண்ட ஆல்ய மானசா.? புதிய சீரியலுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா.? அதிர்ச்சியாகும் சக சீரியல் நடிகைகள்

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும்  ஒரு சில சீரியலுக்கு ரசிகர் கூட்டம் ஏராளம் அந்த வகையில் ராஜா ராணி என்ற சீரியலுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்த சீரியலை காண மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் காத்துக் கொண்டிருக்கும். அதற்கு காரணம் இந்த சீரியலில் நடித்து வந்த ஆல்யமானசா தன். இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மேலும் ஆலயமானசா யூடியூப் தளத்தில் ஒரு புதிய சேனல் ஒன்றை தொடங்கி  தான் அன்றாட வாழ்கையில் செயல்பட்டு வரும் அனைத்து விஷயங்களையும் வீடியோவாக பதிவிட்டு வருகிறார் தன்னுடைய குழந்தைகள் முதல் வீட்டில் வாங்கும் புதிய பொருட்கள் வரை அனைத்தையும் பதிவிட்டு ரசிகர்களிடையே ஷேர் செய்து வருகிறார். இவருக்கு ராஜா ராணி 2 சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டாவது குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் குழந்தை பெற்ற பிறகு மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியுள்ளார். அதாவது இந்த முறை விஜய் தொலைக்காட்சியில் நடிக்காமல் சன் தொலைக்காட்சியில் இனியா என்ற புது தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இனியா சீரியலில் நடித்து வரும் ஆலயமானசாவின் சம்பளம் நிலவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது பொதுவாக விஜய் தொலைக்காட்சியில் நடித்த பொழுது ஒரு நாளைக்கு 12000 முதல் 15 ஆயிரம் வரை சம்பளமாக பெற்று வந்தார்.

அப்படி இருக்கும் நிலையில் ஆலியா மானசா சன் தொலைக்காட்சியில் நடித்து வரும் புதிய சீரியலுக்கு 20 ஆயிரம் வரை சம்பளம் கேட்டுள்ளாராம் இந்த சீரியல் மூலம் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக ஏற்றியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் குழந்தை பிறந்த பிறகுதான் சம்பளத்தை ஏற்றியுள்ளார். ஏற்கனவே வாங்கிய சம்பளம் பத்தாததால் இப்படி ஏற்றிவிட்டாரா என கடும் விமர்சனங்களை ரசிகர்கள் ஆல்யா மானசா முன்பு கோரிக்கை வைத்து வருகிறார்கள்..

இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கபடுகிறது.

iniya
iniya

Leave a Comment