ஆல்யா மானசாவுக்கு என்ன ஆச்சு.. காலில் இவ்வளவு பெரிய தழும்பு – புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

Alya Manasa : சமீபகாலமாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகராக சின்னத்திரை நடிகைகளும் நடிப்பு,  கிளாமர் போன்ற அனைத்திலும் டஃப் கொடுத்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் சினிமா நடிகைகளுக்கு நிகராக சீரியல் நடிகைகளும் அதிக ஃபாலவர்ஸ்களை கொண்டுள்ளனர்.

அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஆலியா மானசா சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒருவர். மாடர்ன் புகைப்படங்கள் மற்றும் தன் குழந்தைகள் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு அதிக ரசிகர்களை கவர்ந்தவர். இவர் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ஹீரோயின் ஆக நடித்து பிரபலமடைந்தவர்.

முதல் சீரியலே இவருக்கு அமோக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதோடு மட்டுமல்லாமல் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டு தற்போது இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்ற இரு குழந்தைகளுக்கு இருக்கின்றனர்.

இருவரும் முதல் முதலில் அறிமுகமான ராஜா ராணி சீரியலின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து தனியாக நடிக்க ஆரம்பித்தனர். அந்த வகையில் ராஜா ராணி சீசன் 2விலும் ஆல்யா ஹீரோயின் ஆக நடித்து வந்தார் அப்பொழுது இவர் கர்மமாக இருந்த காரணத்தினால் பாதியிலே இந்த சீரியலை விட்டு வெளியேறி பிறகு குழந்தை பெற்று மீண்டும் உடம்பை ஃபிட்டாக மாற்றிக்கொண்டு..

தற்பொழுது சன் டிவியில் இனியா தொடரில் ஹீரோயின்னாக  ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.  சமீபத்தில் ஆலியா வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர் அந்த புகைப்படத்தில் ஆலியாவின் காலில் ஒரு பெரிய தழும்பு இருக்கின்றன அதைப் பார்த்து இந்த தழும்பு எப்படி ஏற்பட்டிருக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை ஆலியா மானசா சீரியல் நடிகைகளுக்கிடையே நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்ட போது இடது கால் எலும்பு முறிந்து அதற்காக அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார். இது நடந்து சில மாதங்களாகும் தற்பொழுது ஆலியா மானசா நல்லா தான் இருக்கிறாராம்.

Alya Manasa
Alya Manasa