குழந்தை பெற்ற பிறகும் பிடித்த பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆலியா மானசா.! உன்னுடைய நடனத்தை மிஞ்ச எந்த ஒரு பெண்ணும் கிடையாது. சஞ்சீவ் அதிரடி கமெண்ட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆல்யா மானசா, இவர் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஜோடியாக நடித்து வந்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு தற்பொழுது அய்லா சையத் என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது, இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பல நிகழ்ச்சிகளில் நடனமாடி புகழ் பெற்றவர். குழந்தை பெற்ற பிறகும் மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நடிப்பதற்கு தயாராகி வருவதாக சமீபத்தில் கூறினார்.

இந்த நிலையில் ராஜா ராணி சீரியல் இயக்குனர் பிரவீன் பெண்ணெட் புதிய சீரியலை இயக்க இருப்பதாகவும் அதில் நடிக்க இருப்பதாகவும் ஆலியா மானசா தெரிவித்துள்ளார். ஆலியா மானசா எப்பொழுதும் கலகலப்பாக இருப்பவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்க வைத்துக்கொள்வார்.

அதுவும் இவர் புடவை கட்டிய புகைப்படத்தை தான் அடிக்கடி வெளியிடுவார், சமீபத்தில்கூட அவருடைய குழந்தை செய்யும் க்யூட் ரியாக்சன்களை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார், இந்தநிலையில் ‘நட்பதிகாரம் 79’ படத்தில் தேவா பாடிய ‘சொல்லு சொல்லு செல்லமா’ என்ற பாடலுக்கு மரணமாக குத்தாட்டம் ஆடி அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது. அதேபோல் மனைவியின் நடனத்தை பார்த்த சஞ்சீவ் ‘உன்னுடைய நடனத்தை மிஞ்ச எந்த ஒரு பெண்ணும் கிடையாது’ என கூறியுள்ளார்.

https://www.instagram.com/tv/CDSllevFXLy/?utm_source=ig_embed

Leave a Comment