எப்போதும் என்றென்றும் சிஎஸ்கே தான்.! ஜடேஜா போட்டோ ஒத்த பதிவு தரமான பதில் கொடுத்த சென்னை அணி!! இடையில சின்ன தலை வேற..

2023 காண டி20 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலம் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சினில் ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்துக் கொள்ளும் வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.

அது மட்டுமல்லாமல் வீரர்களை தக்க வைப்பதற்கான காலக்கெடும் நேற்றோடு முடிந்தது இதனால் நேட்று ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் அந்த அணியில் இருந்து வெளியேற்றிய வீரர்களின் பட்டியலையும் நேற்று வெளியிட்டுள்ளது அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் வெளியேறிய வீரர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

அதன்படி நீண்ட ஆண்டுகளாக சென்னை அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜடேஜா நீடிப்பாரா அல்லது வெளியேறுவாரா என்ற கேள்விகள் சென்னை அணியை சூழ்ந்து இருந்தது. அது மட்டுமல்லாமல் கடந்த ஐபிஎல்லில் ரவீந்திர ஜடேஜா தனது சிறப்பான ஆட்டத்தை வெளி காட்டி இருப்பார் இதனாலே ஜடேஜாவை பல சென்னை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா விளையாடுவாரா இல்லையா என்ற கேள்விக்குறி இருந்து வந்தது தற்போது அதற்கான விடையும் கிடைத்துள்ளது. அதன்படி ஜடேஜாவை சிஎஸ்கே அணி தக்க வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தொடர்கிறார் என்றும் கூறப்படுகிறது அதே நேரத்தில் சென்னை அணியின் ஆல் ரவுண்டுரான பிராவோவை வெளியேற்றியது தற்போது சென்னை அணியின் கைவசம் 20.45 கோடி உள்ளது. இந்த நிலையில் சென்னை அணி தக்க வைத்துக் கொண்ட ஜடேஜா தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணியின் கேப்டன் ஆன தோனியுடன் ரெய்னா மற்றும் ஜடேஜா இருக்கும்படியான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் ஜடேஜா அதில் எல்லாம் நன்றாக இருக்கிறது மீண்டும் தொடங்கலாமா என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார் ஜடஜா. இதற்கு இன்ஸ்டாகிராமில் சென்னை அணியின் முன்னாள் வீரரான சின்ன தல சுரேஷ் ரெய்னா அனுப்பியுள்ள ரிப்ளை வைரல் ஆகி வருகிறது.

அதாவது ரைனா அளித்த ரிப்ளைவில் சிஎஸ்கே என்பது வாழ்க்கையில் ஒரு குடும்பம் என பதிவிட்டுள்ளார் அதற்கு மறு ரிப்ளை செய்த சென்னை அணி எப்போதும் என்றென்றும் சிஎஸ்கே தான் என பதிவிட்டு உள்ளது. இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave a Comment