ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர புதிய ரூட்டை பிடித்த அல்லு அர்ஜுன்.! போடு அதுவும் இந்த படத்தின் மூலமா.?

சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் பலரும் காலத்திற்கு ஏற்றவாறு நடிப்பை மாற்றி கொண்டு பயணிக்கின்றனர். அதனால்தான் இப்போது இருக்கின்ற சினிமா பிரபலங்கள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்கின்றனர் ஆனால் அவர்கள் அனைவரும் ரசிகர்களை கவர்ந்தார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்

ஒரு நடிகர் எப்போதும் ஒரே மாதிரியான ரோலில் நடிப்பது அவரது  ரசிகர்களுக்கு மிகப்பெரிய எம்மாறத்தை கொடுக்கும். ரசிகர்களை கவர் ஆர்வமும் வித்தியாசமான நடித்தால்தான் அது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். அதற்கு ஏற்றவாறு தன்னை முற்றிலும் மாற்றி கொண்டு சிறப்பாக பயணிக்கிறார் அல்லு அர்ஜுன்.

இவர் கடைசியாக நடித்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் ஹிட்டடித்தது இதை தொடர்ந்து தற்போது ஹீரோ வில்லன் சாயலில் இருக்கும் ஒரு புதிய படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த திரைப்படத்திற்கு புஷ்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படமும் சுமார் 250 கோடி முதல் 270 கோடி வரை இருக்கும் என தகவல்கள் வெளியாகின்றன.

இந்தப் படம் மிகப் பெரிய படம் என்பதால் அதை ஒரேபாதத்தில் எடுக்க முடியாது என்பதால் இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் படக்குழு திட்டமிட்டுள்ளது. தெலுங்கில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி அங்கு ஒரு தனி ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் அல்லு அர்ஜுன் தற்போது இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர ரெடியாக இருக்கிறார்.

அதற்கு காரணம் இந்த படத்தில் எல்லையோர ஆந்திர வனப் பிரதேசத்தில் நடைபெறும் செம்மர கடத்தலை  மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளதால் படம் விறுவிறுப்பாக இருப்பதோடு இந்த படத்தில் அவர் தமிழராகவும் நடித்துள்ளார் இதன்மூலம் அவர் தமிழ் ரசிகர்களை சிறப்பாக கவர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment