“புஷ்பா” திரைப்படத்தில் மிரட்டிய அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா – வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த சூப்பர் தகவல்.

சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களிலேயே மக்களைப் பெருமளவில் கவர்ந்த திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருந்தது இப்படம் விறுவிறுப்பாகவும் அதேசமயம் காதல், சென்டிமென்ட் என அனைத்தும் இருந்ததால் இந்த படம் அனைத்து தரப்பட்ட ரசிகர்களையும், சினிமா பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்திருந்தது .

மேலும் ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து அசத்தியதால் படம் வெற்றியை நோக்கி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தில் சமந்தா, பகத் பாசில், ரஷ்மிகா மந்தனா  மற்றும் பலர் நடிப்பில் அசத்தியிருந்தார்.

இந்தப் படம் இதுவரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது புஷ்பா திரைப்படம் மொத்தம் ஐந்து மொழிகளில் இந்திய அளவில் வெளியானது உலக அளவில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று இன்னும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடித்ததற்காக டாப் நட்சத்திர பிரபலங்கள் யார் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் உலா வருகிறது அதன்படி பார்வையில் டாப் நடிகரான அல்லு அர்ஜுன் இந்தத் திரைப்படத்திற்காக 18 லிருந்து 20 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ராஷ்மிகா மந்தனா 8 கோடி இலிருந்து 10 கோடி வரை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

வில்லனாக பகத் பாசில் நடித்து இருந்தார் அவர் இந்தத் திரைப்படத்திற்காக சுமார் 3.5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக வரும் சமந்தா ஐட்டம் பாடலுக்கு ஆடிய அதற்காக மட்டுமே சுமார் 1.5 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.

Leave a Comment