விஜய் டிவியை கவுக்க போகும் ஆலியா மானசா.? அதிரடி முடிவால் ஆட்டம் காணும் இல்லத்தரசிகள்.

விஜய் டிவியில் சில சீரியல்கள் அமோக வெற்றியைப் பெற்றதால் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் டிஆர்பி-யில் முன்னணி வகித்த ராஜா-ராணி-சீரியல் முடிந்த நிலையில் சமீப காலங்களாக ராஜா ராணி 2 ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீரியல் மிகவும் சுறுசுறுப்பாகவும் பல திருப்பங்களும் இருந்து வருவதால் ரசிகர்கள் விரும்பும் வகையில் இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் வில்லியான அர்ச்சனா பல சதி வேலைகளை செய்து வந்தாள். அர்ச்சனா செய்த சதிகள் அனைத்து பழியையும் சந்தியா மீது போட்டு இருந்தார் ஆனால் அனைத்து  சதித் திட்டங்களையும் சந்தியா ஆதாரத்துடன் நிரூபித்தார் எனவே வசமாக மாட்டிக் கொண்டார் அர்ச்சனா.

வசமாக மாட்டிக் கொண்டதால் அர்ச்சனா சந்தியாவை பழிவாங்கும் எண்ணத்தில் இருந்து வரும் நிலையில் சில விஷயங்களை செய்து சந்தியாவை மாட்டிவிடுகிறார். இவ்வாறு மிகவும் சுறுசுறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் உண்மையில் சந்தியா கேரக்டரில் நடித்து வரும் ஆலியா மானசா கர்பமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த சீரியலில் நடிப்பதற்கு சிரமப்பட்டு வரும் ஆலியா மானசா பிரசவத்தை முன்னிட்டு இந்த சீரியலில் இருந்து விலக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே சில நாட்களில் விலகவுள்ள ஆலியா மானசா சந்தியா கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

என்னதான் சந்தியா கேரக்டரில் வேறு நடிகையை போட்டாலும் அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று ஒரு பக்கம் இருந்தாலும் நிறைமாத கர்ப்பிணியாக ஆலியா மானசா மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.  இந்தக் காட்சிகளுக்கு முன்பே சந்தியாவை ஐபிஎஸ்  ஆக மாற்ற வேண்டும் என்று இயக்குனர் திட்டமிட்டிருந்தார். ஆனால் ஆலியா மானசா  கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கதையை வேறு மாதிரி மாற்றினார்.

ஒருபக்கம் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இயக்குனர்  இந்த சீரியலின் கதையை மாற்றுவாரா? இல்லை கதாநாயகியை மாற்றுவாரா? என்பது தெரியவில்லை.

Leave a Comment