பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்பில் பிரபல நடிகரை காட்டிற்குள் அலேக்கா தூக்கி சென்ற குதிரை.! என்ன ஆச்சு தெரியுமா.?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் 2 இந்த திரைப்படம் வருகின்ற 28ஆம் தேதி பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அந்த வகையில் பார்த்தால் இந்த திரைப்படத்தில் நடித்த பல நடிகர்கள்,நடிகைகள் தற்போது படத்தின் புரோமோஷனுக்காக பல ஊர்களுக்கு சென்று இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இந்த திரைப்படத்திற்காக இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது அதில் கலந்து கொண்ட பல நடிகர்களும் தங்களது சுவாரசியமான படப்பிடிப்பு கதைகளை கூறினார்கள். அதுபோல நடிகர் ஜெயராம் பட சூட்டிங்கில் நடிகர் பிரபுவுக்கு நடந்த சம்பவம் பற்றி ஒன்றை கூறியுள்ளாராம்.

அதில் ஜெயராம் இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்பே இயக்குனர் மணிரத்னம் அவர்கள் என்னை குதிரையேற்றம் கற்றுக்கொள்ள சொன்னாரு ஆனால் என்னால் முடியாது சின்ன வயதில் எங்களது குடும்பத்துடன் ஊட்டிக்கு சென்ற பொழுது குதிரை என்னை மிதித்து விட்டது என சொன்னேன் அதே சமயம் நடிகர்கள் கார்த்தி,ஜெயம் ரவி போன்ற எல்லாரும் பயிற்சி எடுப்பதையும் நான் பார்த்து இருக்கிறேன்.

அப்புறம் ஒரு நாள் லொக்கேஷன் மாறிடுச்சு தாய்லாந்து போனோம் அங்க பார்த்தா இங்க பயிற்சி எடுத்த குதிரைகள் போல் ஒன்றுமே இல்லை இருந்தது எல்லாமே பெரிய குதிரைகள் கார்த்தி,ஜெயம் ரவி எல்லாரும் என்னால முடியலன்னு சொல்ற மாதிரி வருவாங்க ஆனா நாம இந்த குதிரைகளை கையாள்வது மிகவும் கடினமாக இருந்துச்சு.

அதன் பிறகு பிரபு ஒரு நாள் ஷூட்டிங்க்கு வந்தாரு அவர் பிறந்ததிலிருந்து குதிரைகளோடு வளர்ந்தவரே அதனால பிரபு கிட்ட போய் ஆலோசனை கேளுங்கள் என கார்த்தியிடமும்,ஜெயம் ரவி இடமும் நடிகர் ஜெயராம் கேட்க சொன்னாராம் பிரபுவிடம் கேட்டபொழுது பிரபு குதிரை ஏறும் பொழுது காது,கால்,வால் ஆகியவை பார்த்து தான் ஏற வேண்டும் என சொல்லிவிட்டு என்னுடைய குதிரை எங்கே என மணிரத்னம் அவர்களிடம் கேட்டாராம்.

karthi
karthi

ஆனால் அவருடைய குதிரையை முதலில் காட்டவே இல்லையாம் தாய்லாந்தில் ஷூட்டிங்க்கு வந்த 31 குதிரைகளில் ஒரு குதிரை மட்டுமே ஆண் குதிரையாம் அந்த ஆண் குதிரையை தான் நடிகர் பிரபுவுக்கு கொடுத்தார்களாம் அவர் குதிரையை பார்த்த உடனே இது குதிரை இல்லை ஒட்டகம் மாதிரி இருக்கு என்னால ஏறவே முடியாது மணி என இயக்குனரிடம் தெரிவித்துவிட்டாராம்.

எப்படியோ ஒரு வழியாக குதிரையில் ஏறிய பிறகு அது ஒரு காட்டிற்குள் சென்று விட்டதாம் பிறகு பிரபு மணி புடி புடி என கத்தினாராம் அதன் பிறகு பத்து நிமிஷம் கழித்து தான் காட்டிலிருந்து வெளியே வந்தாராம். வெளியே வந்த பிரபு சூட்டிங் போகலாம் என சொல்லிவிட்டு இப்பொழுது வரை உள்ளே என்ன நடந்தது என்பது எனக்கு இன்னுமே தெரியவில்லை என ஜெயராம் இந்த நிகழ்ச்சியில் காமெடியாக பேசியதாக இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment