அக்ஷராவின் ஆசையில் மண்ணை வாரி போட்ட சிபி..! அக்ஷராவின் கண்ணீருடன் வெளிவந்த ப்ரோமோ..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்னவென்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பல கோடி மக்களும் மிக ஆர்வமாக பார்த்து வருகிறார்கள் அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று புதிய கேப்டன் தேர்வு செய்வது வழக்கம்.

அந்தவகையில் இந்த வார கேப்டனுக்கு வைக்கப்படும் டாஸ்க் ஆனது ப்ரோமோவில் வெளிவந்துள்ளது அந்தவகையில் கேப்டன் பதவிக்கு போட்டி போட போகும் போட்டியாளர்களின் பொம்மைகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும்.

அதேபோல அவர்களுக்கு எதிராக ஒரு பானை வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் போட்டியாளர்கள் யாரை கேப்டனாக ஆக்கவேண்டும் என நினைக்கிறார்களோ அந்த நபருடைய பொம்மையின் பானையை உடைக்க வேண்டும் இது தான் டாஸ்க்.

அந்த வகையில் முதல் நபராக செல்லும் சிபி அவர்கள் அக்ஷராவின் தலையிலுள்ள பானையை உடைத்துள்ளார் இதனை தொடர்ந்து தனக்கு தற்போதுதான் கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது ஆகையால் எனக்கு கேப்டன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அக்ஷரா வேண்டுகோள் கொடுத்துள்ளார்.

ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் சிபி அவர்கள் அக்ஷரா தலையில் உள்ள பானையை உடைந்ததன் காரணமாக அக்ஷரா கண்கலங்கி உள்ளார் இவ்வாறு  அந்த கண் கலங்கும் காட்சி உடன் இந்த புரோமோ வெளியாகி உள்ளது.

ஏற்கனவே பிரியங்கா கேப்டனாக ஆக வேண்டும் என்று நினைத்தபொழுது வாயாடியை கேப்டன் ஆக்கக்கூடாது என நிரூப் தடுத்துள்ளார். இவ்வாறு வெளிவந்த ப்ரோவால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன்  பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்.

Leave a Comment