மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த அஜித்.! ஏகே 62 இப்படித்தான் இருக்கும்.! தரமான சம்பவம் செய்ய போகும் மகிழ்த்திருமேனி

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூலிலும் பட்டையை கிளப்பியது.

இதனை அடுத்து தற்போது ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாத நிலையில் இந்த திரைப்படம் குறித்து பல வதந்திகள் சமுக வலைதள பக்கங்களில் பரவி வருகிறது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் இயக்குனர் ஏற்கனவே விக்னேஷ் சிவன் என்று அறிவித்திருந்த நிலையில் விக்னேஷ் சிவன் கூறிய கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தி அளிக்காததால் விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து நீக்கினார்கள்.

அதன் பிறகு இந்த படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி என்று ஒரு அறிவிக்கப்படாத தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வரையிலும் ஏகே 62 திரைப்படம் குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் சலசலப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது அது மட்டுமல்லாமல் இது நடந்தால் ஏகே 62 திரைப்படம் கண்டிப்பாக வெற்றி தான் என்று கூறப்படுகிறது.

அதாவது ஏகே 62 திரைப்படத்தின் கதையை மகிழ் திருமேனி அவர்கள் முழுமையாக எழுதி முடித்து விட்டாராம் அதுமட்டுமல்லாமல் இந்த கதை கொஞ்சம் அஜித்திற்கு திருப்பி அளிக்காததால் தனக்கேற்றது போல் அஜித் அவர்கள் சில மாற்றங்களை செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம் ஒரு கொரியன் படத்தின் டப்பிங் ஏகே 62 திரைப்படமாக அறிவிக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. கொரியன் திரைப்படத்தின் கதை அஜித்திற்கு பிடிக்காததால் மகிழ் திருமேனியின் கதைக்கு ஓகே சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த கதையில் நடிகர் அஜித் அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் புகுந்து விளையாடுவார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அது மட்டுமல்லாமல் மகிழ் திருமேனியும் போலீஸ் கதையை உருவாக்குவதில் வல்லவர் ஆகையால் இருவரும் இந்த படத்தில் இணைந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தே இருக்கிறது.

அனால் ஏகே 62 குறித்த எந்த அப்டேட்டும் வரவில்லை. அதற்க்கு பதிலாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது ஏகே 62 திரைப்படத்தின் புதிய கதையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மங்காத்தா, என்னை அறிந்தால் படத்திருக்கு இணையாக ஏகே 62 திரைப்படத்தின் கதை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இனிவரும் காலங்களில் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட்டை ஏகே 62 தலைப்பில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் விரும்பவில்லையாம் ஆகையால் ஏகே 62 திரைப்படத்தின் டைட்டிலுடன் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment