தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் இவர் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் தனது 61 வது திரைப்படத்திற்காக அதிரடியாக உடல் எடையை குறைத்து விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது. அஜித்தும் தற்பொழுது சென்னை வந்துள்ளார் வெகு விரைவிலேயே ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. ஏகே 61 திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகுவதால் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என தெரிய வருகிறது.
மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித்குமார் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம் ஒன்று வயதான கதாபாத்திரம் மற்றொன்று இளமையான கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் அஜித் வயதான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார் அதனால் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், தெலுங்கு நடிகர் அஜய் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏகே 61 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்த வருடம் கடைசியில் டிசம்பர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக..
ஒரு பக்கம் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித் குமார் சென்னை ஏர்போட்டில் போலீசார்களுக்கு கை கொடுத்து நன்றி தெரிவித்த வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..
His Respect ❤🙏#Ajithkumar – #Ajith – #AK61. pic.twitter.com/JoKHSZuoRB
— EMPEROR AJITH FANS (@EmperorAjithFC) July 24, 2022