அஜித் சொன்ன ஒரு வார்த்தை உருவான ரசிகர்கள்..! ஹோட்டலில் நடந்த சுவாரஸ்யத்தை உடைத்த பிரபல நடிகர்

Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் தற்போது நடித்து வருகிறார் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

அஜித்துடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்த நிலையில் நடிகரும், பாடகரும், இயக்குனருமான வினித் சீனிவாசன் அண்மையில் அஜித்தை சந்தித்துள்ளார்.

என் புருஷனுக்கு ட்ரீட்மென்ட் பண்ணுங்க டாக்டரிடம் சண்டை போட்ட மகா.. கதறி அழும் தசரதன், கோடீஸ்வரி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அது குறித்து சமீபத்திய பேட்டியில் விலாவாரியாக பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. நான் அஜித்தின் தீவிர ரசிகன் தமிழ்நாட்டில் எனக்கு பிடித்த நடிகர் அஜித் தான் என கூறினார்.  நான் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்றேன் பக்கத்து டேபிளில் அஜித் இருந்தார்.

ஏற்கனவே அஜித்தை ஒரு முறை சந்தித்திருந்தேன்.. இந்த தடவை அஜித்தை சந்தித்து சார் நீங்களும் நானும் முன்பே சந்தித்திருந்தோம் எனக் கூறினேன் உடனே ஆமாம் நாம் கோயம்பேட்டில் ஒரு தடவை சந்தித்தோம் என கூறினார்.

புடவையுடன் நனைந்த மாளவிகா மோகனன்.! நீங்க நனைந்தா எங்களுக்கு சளி பிடிக்குது எனக்கூறிய ரசிகர்கள்..

எனது டேபிளில் நிறைய நண்பர்கள் உட்கார்ந்திருந்தனர் ஆனால் நான் மட்டுமே அஜித்திடம் பேசிக் கொண்டிருந்தேன் பிறகு அஜித் சாப்பிட்டு விட்டு வந்து எனக்கு மட்டும் பாய் சொல்லாமல் என் கூட அனைவருக்கும் பாய் சொல்லிவிட்டு போனார் அன்றிலிருந்து அங்கு இருந்தவர்கள் அனைவரும் அஜித் ரசிகர்களாக மாறினார்கள் என கூறினார்.