எங்க வீட்டுக்கு அஜித் சார் வந்தார் – போட்டியில் ரம்யா பாண்டியன் சொன்ன சூப்பர் தகவல்.

மொட்டை மாடியில் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் களை நடத்தி அதன் மூலம் வைரல் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன் அதன்பிறகு இவரை சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் பின்பற்றத் தொடங்கினார். அவருக்கு நிறைய வாய்ப்புகளும் வந்தன. அதில் ஒன்றுதான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ரம்யா பாண்டியன் கண்டஸ்டன்ட் ஆக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் இவரது அழகான பேச்சு மட்டும் சிரிப்பாள் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். அதுமட்டுமல்லாமல் ரம்யா புகழ் காப்போ உலகம் முழுவதும் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன். அதே விஜய் டிவி தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு சீசன் 9 இல் ஜட்ஜாக பணிபுரிந்தார்.

இந்த சீசன் நடந்து கொண்டிருக்கையில் அவருக்கு மற்றொரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்தது அதுதான் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4. இந்த வாய்ப்பை இவர் நழுவவிடாமல் பிக் பாஸ் சீசன் 4 யில் கலந்து கொண்டு இவர் தெளிவாகவும், சூப்பராகவும் விளையாடி பைனல்ஸ் வரை சென்றார் இருந்தும் டைட்டில் வின் பண்ண முடியவில்லை.

டைட்டில் வின் பண்ண முடியவில்லை என்றாலும் மக்களின் ஃபேவரட் நாயகியாக என்றுமே ரம்யா பாண்டியன் திகழ்க்கிறார். ரம்யா பாண்டியன் எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். தனது உடல் அழகுக்கு ஏற்ற உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டே இருப்பார். தற்போது கூட இவர் நடித்த ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் அமேசான் பிறைமில் வெளியாகி மக்களின் வரவேற்பைப் பெற்றது. அண்மையில் அவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருந்தார்.

அதில் அவர் பேசும்போது, அஜித் அவர்கள் எங்களது வீட்டு விசேஷங்களுக்கு வந்து இருக்கிறார் எனக்கு அது மிகவும் பெருமையான விஷயம் என்றும் அவர் எல்லோரிடமும் நின்று நிதானமாகவும் பேசி இருந்தார் அதுபோல் தளபதியையும் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன் அப்போது போல் இன்றும் இளமையாகவே இருக்கின்றார் எனவும் பேசியுள்ளார்.

Leave a Comment