அஜித்,விஜய், சூர்யாவுக்கு வெறி அதிகம்.. பிளான் பண்ணி இந்த இடத்துக்கு வந்திருக்காங்க.. பிரபல இயக்குனர் பேச்சு.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா மூவருமே ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் இருக்கின்றனர். அஜித் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். படம் முழுக்க முழுக்க திரில்லர் படமாக இருக்கும் என தகவல்கள் வெளி வருகின்றன.

விஜய் நிற்க கூட நேரமில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் இவர் இந்த வருடத்தில் வெளியான வாரிசு, லியோ வெற்றி பெற்றதை தொடர்ந்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் படம் அடுத்த வருடம் கோடை விடுமுறை நாளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

புயல் நிவாரண உதவிக்காக அஜித் எவ்வளவு கொடுத்தார் தெரியுமா? விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்..

மறுபக்கம் நடிகர் சூர்யா ரசிகரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய படங்களில் நடித்து வருகிறார் விக்ரம், ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் இணைந்து கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த மூன்று பேருமே இன்று உச்சத்தில் இருக்க காரணம் சினிமா மீது உள்ள வெறி என்று கூறலாம் இந்த நிலையில் இயக்குனர் வசந்த் பேட்டி ஒன்றில் அஜித், விஜய், சூர்யா இந்த உயரத்தில் இருப்பதற்கான காரணத்தை கூறி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. ஒரு விஷயத்துல எவ்வளவு டெடிகேஷன், எவ்வளவு தீவிரமா இருக்கீங்க..

தம்மு, தண்ணி அடிக்கிற பழக்கம் அர்ச்சனாவுக்கு இருக்கு.. நீ பெரிய யோக்கியமா? ரசிகர்கள் ஆவேசம்

எவ்வளவு ஹம்புளா இருக்கீங்க பொறுத்து இருக்கு.. மேலும் இந்த மூணு பேரு கிட்டயும் எந்த ஒரு தலைக்கணமும் இல்லை. நான் அஜித், விஜய், சூர்யா மூணு பேர்  கூட ஒர்க் பண்ணி இருக்கேன் 3 பேருக்கு சினிமாவுல ஜெயிக்கணும் என்கிற வெறி இருந்துச்சு..

வெள்ள இதயம் இருக்கணும் அது பத்தி எரிஞ்சுகிட்டே இருக்கணும் அது அந்த மூணு பேரு கிட்டயும் இருக்கு நான் கண்ணால பார்த்திருக்கேன் அவங்க இப்ப எவ்வளவு பெரிய உச்சத்தை எட்டி இருக்காங்கன்னு நல்லாவே தெரியுது..  அவங்க பிளான் பண்ணி இந்த இடத்துக்கு வந்திருக்காங்க என கூறினார்.

Exit mobile version