பொன்னியின் செல்வன் கதையில் அஜித்,விஜய்.? பிரபல இயக்குனர் போட்ட மாஸ்டர் பிளான்..

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களாக வளம் வருபவர்கள் அஜித்,விஜய் இவர்கள் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் அந்த வகையில் கடந்த பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வந்தது இந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்தது மேலும் அஜித்,விஜய் இருவரும் கடைசியாக நடித்த திரைப்படம் தான் ராஜாவின் பார்வையிலே இந்த திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தார்கள்.

இப்பொழுது இருவரும் சேர்ந்து நடிப்பார்களா என்பது சந்தேகம்தான் ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என கங்கை அமரன் தன் மகன் வெங்கட் பிரபுவிடம் கூறியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆம் வெங்கட் பிரபுவிடம் பொன்னியின் செல்வன் நாவலை அடிக்கடி படிக்க சொல்வாராம் கங்கை அமரன் படிக்க சொல்வது மட்டுமல்லாமல் அந்த கதையில் அஜித்,விஜய் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என வெங்கட் பிரபுவிடம் அடிக்கடி கூறுவாராம். ஏன் அஜித்,விஜய்யை சந்தித்தபோது கூட நீங்கள் இருவரும் இந்த கதையில் நடிக்க வேண்டும் எனது ஆசையை நிறைவேற்றுமாறு கங்கை அமரன் கூறியதாக பிரபல பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளாராம்.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் வெங்கட் பிரபு பொன்னியின் செல்வன் கதையை படித்துவிட்டு விஜய்,அஜித் ஒரு வேலை இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் என தெரிவித்து இருந்தால் வெங்கட் பிரபுவே இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கியிருப்பார்.

எனவும் இந்த திரைப்படத்தில் அஜித்,விஜய் நடித்திருந்தால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுப்பது மட்டுமல்லாமல் பல கோடி வரை வசூல் செய்திருக்கும் என ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் இந்த தகவல் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ajith and vijay
ajith and vijay

Leave a Comment