அஜித், கவுண்டமணிக்கு இருக்கும் ஒற்றுமை இப்பொழுது இருக்கும் யாருக்குமே இல்லை – ரியல் ஹீரோ இவுங்க தான்.

சினிமா உலகில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி ஒரே மாதிரியாக இருப்பார்கள். நடிகர் அஜித் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த போது அவரே பல பேட்டிகளில் சொல்லும் விஷயம் என்னவென்றால் முன்கோபம் அதிகம் மனதில் பட்டதை பேசி விடுவேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் தன்னை பெருமையாக பேசிக் கொள்வது வழக்கம் ஆனால் அஜித் தன்னிடம் இருக்கும் நல்ல கெட்ட பழக்கத்தை ஓபன்னாக பேசிவிடுவார். நடிகர் அஜித் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க காரணம் அவரது ரசிகர்கள் தான் ஏனென்றால் தமிழ் சினிமாவில் அதிக தோல்வி படங்களை கொடுத்தவர் நடிகர் அஜித்.

இருப்பினும் அவரது எண்ணம் செயல்பாடு ஆகியவை நேர்மையாக இருந்த காரணத்தினால் அஜித்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் இருப்பினும் தனக்கென ஒரு நல்ல ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் அவர்களும் சாதனை படைக்க வேண்டும் என்கின்ற காரணத்தினால் தனக்கு மன்றங்கள் வேண்டாம் என கலைதார் ரசிகர்கள் நன்றாக இருந்தால் போதும் என கூறி மன்றத்தை கலைத்து இவர்தான்  என்றால் இல்லை நடிகர் அஜித்திற்கு  முன்பாகவே அந்த செயலை செய்து காட்டியவர் நடிகர் கவுண்டமணி.

சினிமா உலகில் ஹிட் படங்களை நடித்து தன்னை பிரபலப்படுத்தி கொண்ட பிறகு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர் கவுண்டமணி இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. தெலுங்கு ரசிகர்கள் இருந்தால் போதும் மன்றம் தேவையில்லை  அவரவர் அவரது வேலையை பார்த்தால் போதும் ரசிகர்களுக்கு தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை என கூறி கலைதார் கவுண்டமணி.

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது மட்டுமல்லாமல் விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது இருந்ததால் என்னவோ உங்கள் மற்றும் ரசிகர்களுக்கு இப்பொழுதும் அவர்கள் இருவரும் உச்ச நட்சத்திரமாக தெரிகின்றனர்.

Leave a Comment