அஜித், நயன்தாரா பண்ணுவது சரி இல்லை என கூறி பிரபல தயாரிப்பாளர் – உடனே பொங்கி எழுந்த பாரதிராஜா.

திரை உலகில் ஒரு படம் உருவாகி அந்த படம் வெளிவரும்வரை படக்குழு ஒரு வழி ஆகிவிடும். காரணம் படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக முடிந்தாலும் படத்தின் பட்ஜெட்டை விட படம் அதிக லாபத்தை பெற வேண்டும் என்பதற்காக நடிகர், நடிகைகள் தொடங்கி பலரும் ப்ரமோஷன் கலந்துகொள்ள வேண்டும் என தயாரிப்பாளர்கள் கேட்கின்றனர்.

அதன் முலம் படம் பிரபலம் அடைந்து நல்ல லாபத்தைஎட்ட முடியும் என்பது பலரின் கருத்து. ஆனால் ஒரு சில நடிகர், நடிகைகள் படங்களில் நடிப்பதோடு சரி  படத்தின் பிரமோஷன் வேலைகளில் கலந்து கொள்ள மறுக்கின்றனர்.அந்த நடிகை, நடிகர் ஆரம்பத்திலிருந்து பண்ணுகிறார்கள் என்றால் கிடையாது ஆரம்பத்தில் படங்களில் நடித்துவிட்டு பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு சென்ற பிறகு படங்களில் நடிப்பதோடு சரி பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுக்கின்றனர். அந்த வகையில் அஜித், நயன்தாரா போன்றவர்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதே கிடையாது குறிப்பாக அஜித் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபட மாட்டார் ஆனால் நயன்தாரா மற்ற தயாரிப்பாளர்களின் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டார் ஆனால் நயன்தாரா தான் தயாரிக்கும் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு மட்டும் கலந்து கொள்வார்.

ஆக மொத்தத்தில் அஜித், நயன்தாரா மீது அவர்கள் சற்று கோபத்தில் தான் தயாரிப்பாளர்கள் இருந்து வருகின்றனர் அதை பல தடவை கே. ராஜன் கூறி உள்ளார் இவர்கள் மட்டும் ஏன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று விமர்சித்துள்ளார். இந்த நிலையில் பெப்சி உறுப்பினர்கள் கே ராஜன் மற்றும் ஜாகுவார் தங்கம் ஆகியவர்கள் சேர்ந்து ஒரு முடிவெடுத்து உள்ளனர் அதாவது அனைத்து நடிகை, நடிகர்களும் இனி புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.

இப்படியிருக்க இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா அவர்கள் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அதில் அவர் கூறி உள்ளது புரமோஷன் பணிகளில் கலந்து கொள்வது என்பது நடிகர் நடிகைகளின் சொந்த விருப்பம் ஒரு படத்தில் நடிக்க கையெழுத்திடம் முன்பு பிரமோஷனில் கலந்து கொள்ள மாட்டேன் என கூறிய தான் அவர்கள் நடிக்கிறார்கள். அந்த முடிவுக்கு தயாரிப்பாளர்களும் சரி என்று சொல்லிவிட்டு இப்பொழுது  நடிகர், நடிகைகள் குறை சொல்வது ஏன் என்று பாரதிராஜா கேள்வி எழுப்பினார்.

மேலும் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தின் நடிகர், நடிகைகளை புக் செய்யும்போது முன்பே இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என சொல்ல வேண்டும் அப்படி சம்மதம் வாங்கி விட்டு பிரமோஷனில் கலந்து கொள்ளவில்லை என்றால் நீங்கள் அவர்கள் மீது புகார் அல்லது நடவடிக்கை எடுக்கலாம் அதை விட்டுவிட்டு இப்போது புலம்புவது ஏன் என கூறினார். பாரதிராஜா சொல்லும் கருத்து சரியாக இருப்பதால் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Leave a Comment