மக்களுக்கு சேவை செய்யும் அஜித் குழு.? வைரலாகும் வீடியோ.

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வரும் அஜீத் தற்போது தொடர்  வெற்றி  திரைப்படங்களுக்காக மிக தீவிரமாக நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பு எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளதால் மற்ற பணிகளை விரைவில் முடித்து வைக்க திட்டம் தீட்டி தற்போது அதில் களத்தில் இறங்கி வேலை செய்கிறது.

இது இப்படியிருக்க அஜித் சினிமா நேரம் போக மற்ற நேரங்களில் தனது திறமைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றி வருகிறார் என்று கூற வேண்டும் அந்த வகையில் இவர் தன்னால் முடிந்த எல்லாவற்றிலும் கால்தடம் பதித்து அதில் வெற்றி கண்டுள்ளார் கார் ரேஸ் பைக் ரேஸ் ட்ரோன் போன்றவற்றில் அவர் படைத்த சாதனைகளை நாம் கண்டுள்ளோம் அதுபோல தற்போது துப்பாக்கி சுடுதல் இன்னும் தங்கத்தை ஆகியவை உள்ள செய்திகளும் வெளியாகின இப்படி இருக்க இது விரைவிலேயே அடுத்த கட்டத்தை நோக்கி அஜித் செல்வார் என பலரும் கூறுகின்றனர்.

சினிமாஉலகில் இருந்து கொண்டே சினிமா நேரம் போக ஒருவர் தனது உடலைக் கவனித்துக் கொள்ளவும் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் நேரம் ஒதுக்குவது வழக்கம் ஆனால் அஜித்தோ சினிமா நேரம் போக குடும்பம், தனது திறமையை வெளிகாட்டுவார். இவ்வாறு இருப்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

மேலும் சென்னை ஏரோநாட்டிகல் மாணவர்களுக்கு ஆலோசகராக தக்க்ஷா குழுவை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் இது ஆபத்து காலங்களில் இந்த ட்ரோன்கள் பயன்படுத்த உதவிகரமாக இருக்கிறது. தற்போது இந்தக் குழுவும் அவருக்கு பல்வேறு விதமான ஒத்துழைப்புகளை கொடுத்துள்ளது.

அதுபோல இந்த தக்ஷா குழு முடிந்த உதவிகளை செய்து வருகிறது அந்த வகையில் நெல்லை மாவட்ட மற்றும் பல மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு கண்காணிப்பதற்காகவும், கிருமி நாசினி தெளிப்பதற்காகவும் தற்பொழுது இந்த குழு தனது முனைப்பு காட்டி வருகிறது.

அதன் வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது இது நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version