உங்களுடைய காதல் உண்மையான காதல்.. 23 வருடம் கழித்தும் குறையாத ரொமான்ஸ்.. வைரலாகும் அஜித் – ஷாலினியின் புகைப்படம்

திரையுலகில் நடிக்கும் நடிகர், நடிகைகள் காதல் பயப்படுவது வழக்கம். அனால் ஒரு சிலர் மட்டுமே உண்மையாக காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர் அந்த வகையில் அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா இந்த லிஸ்டில் இருக்கின்றனர். குறிப்பாக அஜித் – ஷாலினி சரண் இயக்கத்தில் உருவான  “அமர்க்களம்”..

திரைப்படத்தின் போது காதலித்து பின் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணமாகி பல வருடங்கள் கடந்த பிறகும் இப்போதும் இவர்களுடைய காதல் குறையவே இல்லை.. இப்படி இருவரும் இதே காதலுடன் இருக்க முக்கிய காரணம் இவர்கள் எடுத்துள்ள சில முடிவுகள் தான் சில சொல்லப்படுகிறது.

அதாவது நடிகர் அஜித் படங்களில் செம்ம பிசியாக  நடித்து வந்தாலும் ஒரு மாதத்தில் 15 நாள் ஷூட், 15 நாள் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். மேலும் ஷாலினிக்கு பிடித்ததை உடனே வாங்கி தருகிறார் மேலும் தனது குழந்தைகளுக்கு நேரத்தை ஒதுக்கி செலவிடுவதால் ஒரு நல்ல கணவனாக ஷாலினிக்கு தெரிகிறார்.

இதனால் அஜித் – ஷாலினி இடையே உள்ள காதல் இன்று வரை குறையவில்லை என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இவர்கள் திருமணமாகி  இதுவரை 23 வருடங்களுக்கு கடந்த நிலையில் instagram பக்கத்தில் நடிகை ஷாலினி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்துள்ளார். அஜித் கன்னத்துடன் கன்னம் வைத்து ரொமான்ஸ் பண்ணுகின்றனர்.

அந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய ரொமான்ஸ் மற்றும் காதல் இன்று வரை குறையவே இல்லை.. இப்படியே ரொம்ப வருடங்கள் இருக்க வேண்டும் எனக் கூறி வாழ்த்தி அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

ajith
ajith

Leave a Comment