பலமுறை நின்றுபோன அஜித்-ஷாலினி திருமணம்..! எல்லாத்துக்கும் இந்த நடிகர் தான் காரணமாம்..!

பொதுவாக சினிமாவில் நடிக்கும் பல்வேறு பிரபலங்களும் தங்கள் உடன் நடிக்கும் சக நடிகர்கள் மீது காதல் கொள்வதும் பின்னர் அவை திருமணத்தில் முடிவதும் வழக்கமான செயல்தான் ஆனால் இந்த திருமணம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்து செல்கிறது அதன் பிறகு விவாகரத்தில் தான் முடிந்து வருகிறது.

அந்த வகையில் உண்மையான காதல் ஜோடிக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் ஒரு தம்பதிகள் தான் அஜித் மற்றும் ஷாலினி இவர்கள் இருவரும் அமர்க்களம் என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்து நடித்தார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் இவர்கள் இரு குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமணம் பற்றிய செய்தி சமூகவலைத்தள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது கமல் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தில் ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தினை தமிழிலும் நடிகர் கமல்தான் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரசாந்த் நாயகியாக ஷாலினி மற்றும் கோவை சரளா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த பிரியாத வரம் வேண்டும் என்ற பெயரில் வெளியாகின அப்போது இந்த திரைப்படத்தின் சூட்டிங் மூன்று நாட்கள் மட்டுமே இருந்ததன் காரணமாக அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

அது மட்டுமில்லாமல் அந்த நாட்களில் பிரசாந்தின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் படப்பிடிப்பு ஊறிய நேரத்தில் நடக்க முடியாததன் காரணமாக மறுபடியும் அவர்களுடைய திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது இதனால் ஷாலினி தயாரிப்பாளர் சங்கத்திடம் படத்தை சீக்கிரமாக முடிக்கும் படி கேட்டிருந்தார்.

அதன் பிறகு இந்த திரைப்படம் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் தான் நடக்க இருந்தது ஆனால் முதலில் இந்த திருமணம் ஜனவரி மாதம் முடிவு செய்தது இதனை இயக்குனர் பேரரசு அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Leave a Comment