சூப்பர் ஹிட் திரைப்படத்தை ஜோசியம் பார்த்து வெளியிட்ட அஜித்.? இந்த திரைப்படம் வேற லெவல் தானே.?

நம்பிக்கை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருபவர் தான் அஜித் குமார் இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து அதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி தற்பொழுது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் துணிவு இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து விட்டது.

துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது எ.கே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக தொடங்க இருக்கிறதாம். மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார்.இது ஒரு பக்கம் இருக்க அஜித்குமார் பொதுவாகவே ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர் அவரது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்றால் நல்ல நாள் பார்த்து தான் படத்தையே வெளியிட சொல்வாராம்.

அப்படி அஜித் குமார் தனது ஐம்பதாவது திரைப்படமான மங்காத்தாவில் ஜோதிடம் பார்த்து தான்நடித்துள்ளார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் மேலும் அவர் கணித்தது போலவே அந்தத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

மங்காத்தா திரைப்படம் வெளியான பொழுது அந்த திரைப்படத்தில் வரும் மாஸ் பின்னணி இசைக்கு ரசிகர்கள் பலரும் நல்ல வரவேற்பு தந்தார்கள் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த திரைப்படம் அதிக வசூல் செய்தது.

ajith
ajith

சரி அப்படியே இருந்தாலும் அஜித் எதற்காக விவேகம்,வலிமைக்கு ஜோதிடம் பார்க்காமல் இருந்தார் எனவும் ஒரு சில நெட்டிசன்கள் கிண்டல் எழுப்பி வந்ததையும் நாம் பார்த்திருப்போம்.மேலும் இந்த தகவல் தற்பொழுது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி  வருகிறது.

Leave a Comment