பெண் ரசிகையுடன் செல்பி எடுக்க மறுத்த அஜித் – கடைசி நேரத்தில் என்ன சொன்னார் தெரியுமா.? வைரலாகும் வீடியோ.!

சினிமா உலகில் ஓரிரு படங்களில் நடித்துவிட்டால் பேட்டி கொடுப்பது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அறைபறை எல்லாம் செய்வது வழக்கம் ஆனால் சினிமாவுலகில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருபவர் நடிகர் அஜித் குமார்.

தனது படத்தின் புரமோஷனுக்கு கலந்துகொள்வதில்லை ரசிகர்களையும் வெளியே சந்திப்பது இல்லை இப்படி இருந்தாலும் இவரை ரசிகர்கள் பின்தொடர்ந்து தான் வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் சினிமாவில் தனது வேலையை சரியாக செய்வது மறைமுகமா அழகாக உதவி செய்து அசத்தி வருவதால் தற்போது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் பிடித்துப்போன ஒரு நடிகராக அஜித் வருகிறார்.

தற்பொழுது நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்தில் இரவு பகல் பார்க்காமல் நடித்து வருகிறார். அதற்கு காரணம் இந்த வருடம் தீபாவளிக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதால் படக்குழுவினர் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றனர் இதுவரை கிட்டத்தட்ட 80% படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

மீதி இருக்கிற படப்பிடிப்பை முடிக்க நடிகர் அஜித்குமார் தொடர்ந்து விறுவிறுப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் அஜீத் தனது 2வது கட்ட ஷூட்டிங்கிற்காக நேற்று புனே புறப்பட்டு சென்றார் அப்பொழுது ஏர்போர்ட்டில் விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் நடிகர் அஜித்திடம் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆனால் அஜித் அவசர அவசரமாக சென்றதால் அதற்கு “நோ” சொல்லி மறுத்தார் இருப்பினும் போகிற அவசரத்திலும் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்து சொல்லி விட்டு சென்றுள்ளார் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment