அஜித், வலிமை படம் குறித்து முதல் முறையாக ட்வீட் போட்ட நடிகர் பிரசன்னா.! என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா.? வருத்தப்படும் ரசிகர்கள்.

தமிழ்நாட்டு ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வலிமை.  இந்த படத்தை வேறு ஒரு லெவெலில் ஹச். வினோத் எடுத்துள்ளார். மேலும் பிரமாண்ட பொருட்செலவில் போனிகபூர் இந்த திரைப்படத்தை எடுத்து உள்ளார். இந்த திரைப்படம் மிக சூப்பராக வந்திருந்தாலும் பல வருடங்கள் எடுக்கப்பட்டது.

ரசிகர்களையே சற்று வருத்தத்தை கொடுத்தது அதற்கான காரணமும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில்  நடிக்கும் பொழுது சில நடிகர்கள் ஒப்பந்தம் ஆகி இருந்தனர். ஆனால் அவர்களோ கொரோனா காரணத்தினால் நாங்கள் நடிக்க முடியாது என கூறினர். பின்பாக அடுத்தடுத்த நடிகர் நடிகைகளை மாற்றி உள்ளார். மேலும் சில டெக்னீசியன்கள் வராததால் படம் தாமதமானது என  சமீபத்தில் இயக்குனர் சொல்லினார்.

படப்பிடிப்பு முழுவதமாக முடிந்ததையடுத்து வலிமை படக்குழு தல ரசிகர்களை சந்தோஷத்திலேயே வைத்திருக்கிறது. ரசிகர்கள் கேட்பதற்கு முன்பாகவே அப்டேட்டை அள்ளி வீசி வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதைத்தொடர்ந்து  Glimpse மற்றும் அஜித், வில்லன் கார்த்திகேயா ஆகியோருக்கும் புகைப்படங்கள் மற்றும் வலிமை படத்தில் அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் ஆகியவை வெளிவந்த வண்ணமே இருப்பதால் தல ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

மேலும் இயக்குனர் வினோத்தும் பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த படம் குறித்தும் அஜீத் குறித்தும் பல்வேறு விஷயங்களை கூறி வருகிறார். அஜித் இதுவரை இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை கேட்கதான் படத்தில் நடிப்பது வழக்கம் ஆனால் முதல் முறையாக வலிமை தெரியப்படுத்திய நடிகர் பிரசன்னாவை நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும் என கூறி உள்ளார் ஆனால் இயக்குனர் வினோத் அவர்களோ இந்த கதைக்கு வேறு ஒருவருவர் தான் சிறப்பாக இருப்பார் என கூற.. அஜித்தும்  மறுக்கவில்லை.

அதன்பின் தான் வில்லனாக கார்த்ிகேயா இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளதாக செய்திகள் வருகின்றன.  பிரசன்னாவின் மீது அதிக நம்பிக்கை வைத்தார் இருப்பினும் வலிமை படத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதை அறிந்த பிரசன்னா தற்பொழுது ஒரு புதிய ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் அஜித் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருப்பதை கேட்டு சந்தோஷமடைந்தேன் ஆனாலும் வலிமை திரைப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் ஆனது மிகவும் வருத்தமாக இருக்கிறது வருங் காலத்தில் நல்ல விஷயம் நடக்கும் என கூறி உள்ளார் பிரசன்னா.

Leave a Comment

Exit mobile version