விக்னேஷ் சிவனுக்கு மீண்டும் கட்டளையிட்ட நடிகர் அஜித் – கதை இந்த மாதிரி இருந்தா ஓகே தான்..

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது அடுத்தடுத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் அஜித்குமார் தனது 61 வது திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வருகிறார் முதல் கட்ட சூட்டிங் வெற்றிகரமாக..

முடிந்த நிலையில் அடுத்த கட்ட சூட்டிங்கில் அஜித் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது அஜித்தின் 61வது திரைப்படத்தில் மஞ்சு வாரியர் சமுத்திரகனி, வீரா, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது அதேசமயம் இந்த படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் அவர் நடிக்கிறாராம்.

ஒன்று வயது முதிர்ந்த கதாபாத்திரம் மற்றொன்று இளமையான கதாபாத்திரம் ஆகும். முதல் கட்ட படப்பிடிப்பில் வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் அவர் இளமையான தோற்றத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. ஏகே 61 திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக நடிகர் அஜித் குமார் நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து தனது 62 வது திரைப்படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்பொழுது இந்த படத்திற்கான கதையை உருவாக்கி வருகிறார் மேலும் அஜித்தை தொடர்பு கொண்டு கதை விவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது குறிப்பாக இந்த படத்தில் அரசியல் வார்த்தைகள் இடம்பெறக்கூடாது என தெளிவாக அஜித் சொல்லி இருந்தார்.

இந்த நிலையில் நடிகர் அஜித்குமார்  என்னை திருப்தி படுத்தும்படி கதையை அமைக்க வேண்டாம் மக்களும் ரசிகர்களுக்கும் பிடித்த மாதிரி கதையை உருவாக்குங்கள் என தற்பொழுது விக்னேஷ் சிவனுக்கு கட்டளை போட்டு உள்ளாராம் அதனால் விக்னேஷ் சிவன் சற்று நிம்மதி அடைந்து உள்ளாராம். மேலும் படத்தின் கதையை தற்போது சூப்பராக செதுக்கி வருவதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

Leave a Comment

Exit mobile version