தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் கலந்துரையாடுவது போன்றவற்றை செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது அஜித் பட நடிகை தனது பெயரை மாற்றியதால் நெட்டிசன்களின் கிண்டல் தாங்க முடியாமல் அவர் டுவிட்டரில் இருந்து விலகிவுள்ளார் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை மற்றும் மாதவன்விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா உள்ளிட்ட தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அஜித் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ளார்.பிறகு தான் இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
Which intern is handling this account ra babu. 861k followers 🙊 https://t.co/EGGwFDUqFU
— Shraddha Srinath (@ShraddhaSrinath) August 3, 2022
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்த சோசியல் மீடியாவில் மற்ற நடிகைகளை போலவே தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது ரசிகர்களிடம் கலந்துரையாடுவது என மிகவும் ஆக்டிவாக வந்துள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை மாற்றுவதாக அறிவித்திருந்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் என்ற பெயரை ஷ்ரத்தா ரமா ஶ்ரீநாத் என மாற்றிக் கொள்வதாகவும் ரமா என்பது தனது அம்மாவின் பெயர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
On Instagram though i changed my name to Shraddha Rama Srinath. Maybe i should change it here too. Rama is my mom's name. Henceforth will consciously introduce myself as Shraddha Rama Srinath everywhere. Watch me.
— Shraddha Srinath (@ShraddhaSrinath) August 3, 2022
ஷ்ரத்தா என்ற பெயரில் ஆரம்பிக்கும் நடிகைகள் பலர் இருப்பதால்தான் அவர் இந்த பெயரை மாற்றி உள்ளதாக நெட்டிசன்கள் கலாய்த்ததால் அதிர்ச்சி அடைந்த இவர் உங்களுக்கும், உங்களுடைய கமெண்டுகளுக்கும் நன்றி என்றும் நான்கு மாதத்திற்கு டுவிட்டர் பக்கமே வரமாட்டேன் என்று ஆவேசமாக பதில் செய்துள்ளார்.இவர் டுவிட்டரை விட்டு விலகிய பின்னரும் நீங்கள் டுவிட்டரில் இருந்து விலகியதால் டுவிட்டர் நிறுவனத்திற்கு நஷ்டம் ஆகிவிடும் என்று தொடர்ந்த நெட்டிசன்கள் கேள்வியும்,கிண்டலம் செய்து வருகின்றனர்.