ராணுவ வீரர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட அஜித்.! அதுவும் எங்க தெரியுமா.? புகைப்படத்தை பார்த்து வாழ்த்தும் ரசிகர்கள்.

சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களை எப்பொழுதும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது வழக்கம் ஆனால் அந்த ஹீரோ தொடர்ந்து தோல்வியை கொடுத்தால் ஒரு கட்டத்தில் கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ரசிகர்களாக இருப்பவர்கள் தான் தல ரசிகர்கள்.

இவர்கள் எப்பொழுதும் அஜித் படங்கள் வெற்றி / தோல்வி படங்களையும் தாண்டி அவரை நேசிப்பதால் அவரை எப்பொழுதும் கொண்டாடி வருகின்றனர் அதற்கு ஏற்றார் போல ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக தன்னால் முடிந்த சிறப்பான செயல்களை செய்து அசத்தி வருகிறார்.

சினிமாவையும் தாண்டி இவர் துப்பாக்கி சுடுதல், பைக் ரேஸ், கார் ரேஸ், ட்ரோன் போன்றவற்றில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு தனது திறமையை வெளிக் காட்டி இவரது ரசிகர்களும் முன்மாதியாக இருப்பார். இவரது ரசிகக்ரளும் பலவற்றிலும் தனது திறமையை வெளிக்காட்ட ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் தல அஜித் எப்பொழுதும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக இருக்கிறார்.

அஜீத் சமீபத்தில் “வலிமை” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக தற்போது பல இடங்கள் சுற்றி பார்த்து பைக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ajith

தற்போது கூட இவர் “வாகாவில்” உள்ள இந்திய எல்லையில் தேதிய கொடியை கையில் வைத்துக் கொண்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகிறது. மேலும் ராணுவ வீரர்களை சந்தித்தோம் அவர்களை பற்றி தெரிந்து கொண்டும் சிறிது நேரம் பேசினார். மேலும் புகைப்படம் எடுத்துக்கொண்டார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

ajith
ajith

Leave a Comment

Exit mobile version