ஷாலினிக்கு முன்பே அஜித் இவரைத்தான் உருகி உருகி காதலித்தார்.! 10 லவ் லெட்டர் கொடுத்தார் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது, இந்த திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வருகிறார்கள் அந்த வகையில் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் சினிமாவில் இருந்து கொண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தங்களது சந்தோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் ஷாலினியை காதலிப்பதற்கு முன்பாகவே நடிகை ஹீராவை காதலித்து வந்ததாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இது குறித்து பேசுகையில் பயில்வன் அஜித் தொடரும் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது ஹீரோவை காதலித்தார், அப்பொழுது ஹீரோவிற்கு பத்து லவ் லெட்டரை எழுதினார் அதில் ஒரு லவ் லெட்டர் இது நானும் ரமேஷ் கண்ணாவும் எடுத்து விட்டோம் ஆனால் அவர்களது காதலுக்கு ஹீரோவின் அம்மா ஒப்புக்கொள்ளவில்லை.

அதற்கு காரணம் ஹீரா மிகவும் பிஸியாக நடித்து வந்தார் அதனால் அஜித்திற்கு திருமணம் செய்து வைக்க ஹீராவின் அம்மாவிற்கு விருப்பமில்லை. நடிகை ஹீரா ராசகோபால் அவர்கள் சைக்காலஜி படித்த பிறகுதான் சினிமாவில் களம் இறங்கினார் 1991ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியாக இதயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பிறகு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து வந்த இவர் சஞ்சய் தத் நடித்த அமணத்  என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். நடிகை ஹீரா தன்னுடைய நடிப்புத் திறமையால் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த ஹீரா அதன்பிறகு திருடா திருடா, நீ பாதி நான் பாதி, சதிலீலாவதி அவ்வை சண்முகி தொடரும், சுயம்வரம் என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் ஹீரா காதல் கோட்டை, தொடரும் ஆகிய திரைப்படங்களில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார், இந்த திரைப்படங்களில் நடித்த பொழுது அஜித் மற்றும் ஹீரா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது.

ஆனால் அவைகள் அனைத்தும் வதந்தி ஆகவே மாறிவிட்டது கடைசியில் 1999 ஆம் ஆண்டு சுயம்வரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், ஹீரா அதன்பிறகு 2002ஆம் ஆண்டு தொழிலதிபர் புஷ்கர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார், ஆனால் அவர்கள் திருமணம் 2006ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

இந்த நிலையில் நடிகை ஹீரா பலருக்கு வேலைவாய்ப்புகளை கொடுத்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் பல புத்தகங்களையும் எழுதி வருகிறார்.

Leave a Comment