காதலில் இருந்த மோகத்தினால் படத்தை பாதியில் விட்ட அஜித்.! பாதி அவரு மீதி நானா என கும்பிடு போட்டு கிளம்பிய பிரபுதேவா…

நடிகர் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நேருக்கு நேர் திரைப்படத்தில் வசந்த் இடம் உதவி இயக்குனராக இருந்த ஜி மாரிமுத்து அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் சூர்யா பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருந்தார்.

அந்த வகையில் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் அஜித் பெயர் தான் வசந்த் அவர்கள் கூறியதாக கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் நடிகை ஹீரோ மீது அஜித் காதல் மயக்கத்தில் இருந்ததால் மன உளைச்சலில் இருக்கும் போது சில நாட்கள் நடித்து வந்த அஜித் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.

அதன் பிறகு நேருக்கு நேர் படத்தில் வேற யாரையாவது நடிக்க வைக்க வேண்டும் என்று ஜி மாரிமுத்து அவர்களிடம் கேட்டிருக்கிறாராம் அந்த நேரத்தில் பீக்கில் இருந்த பிரசாந்திடம் கேட்டதற்கு நான் டூயல் ரோலில் நடித்து வருவதால் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவாவிடம் கேட்டதற்கு ஒரு ஹீரோ நடித்து வேண்டாம் என்ற படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் அதுமட்டுமல்லாமல் எனக்கு இது பிடிக்காது என்றும் கூறிவிட்டார் என மாரிமுத்து கூறியுள்ளார்.

அதன் பிறகு தான் சிவகுமார் மகன் சூர்யாவை நடிக்க வைக்க கேட்டதாக கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு முன்பு நடிகர் சூர்யாவின் பெயர் சரவணன் ஆக தான் இருந்தது இந்த படத்தில் நடித்த பிறகு சூர்யா என்று மாற்றப்பட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகர் சூர்யாவிற்கு இது முதல் படம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக தான் இருந்தார் ஆனால் இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவிற்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது என்றும் கூறியுள்ளார்.

Leave a Comment