என்னுடைய கையை அஜித் பிடித்தால் போதும்..! அவருக்கு ஒரு பிரம்மாண்டமான படத்தை கொடுப்பேன் – இயக்குனர் பேட்டி.!

சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை கொடுத்தால் மட்டுமே உச்ச நட்சத்திரமாக இருக்க முடியும் அதே சமயம் ரசிகர்களும் வெற்றி படத்தை கொடுத்தால் தான் அந்த நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். சினிமாவில் அதிக தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும்..

அவரது ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருப்பதுடன் நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர்களும் அதிகமாகின்றனர். அதனால் இதுவரையிலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவே அவர் இருக்கிறார் இருப்பினும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அஜித் அண்மை காலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த படங்களும் ஒவ்வொன்றாக வெற்றியைப் பெறுகின்றன இப்பொழுது கூட தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். மூன்றாவது கட்ட ஷூட்டிங் புனேவில் தொடங்கப்பட இருக்கிறது அதை வெற்றிகரமாக முடித்து விட்டால் படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து விடும் என சொல்லப்படுகிறது.

ஏகே 61 படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, அஜய், மகாநதி சங்கர், யோகி பாபு.. மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இது இப்படி இருக்க பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் குறித்து பேசி உள்ளார்.

என்னுடைய படத்தில் அஜித் கண் தெரியாதவர் போல் நடித்திருப்பார். நான் அவர் கையை பிடித்துக் கொண்டு நடந்தேன். இப்போ அவர் என் கையை பிடித்துக் கொண்டு நடந்தால் அவருக்கு ஒரு பிரமாதமான படம் கொடுக்க முடியும் என கூறினார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version