உதவி கேட்டு நின்ற நடிகர் பொன்னம்பலம்.. சைலண்டாக அஜித் பார்த்த வேலை.! வெளிவந்த பரபரப்பு தகவல்

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் தொடர்ந்து தனது படங்களில் நடித்தாலும் தன்னை நாடிவரும் நடிகர், நடிகைகளுக்கு பட வாய்ப்பு மறைமுகமாக வாங்கி தருகின்றனர் மேலும் உதவி என கேட்டு வரும் நடிகர் நடிகைகளுக்கு   உதவிகளை செய்து வருகின்றனர் அந்த வகையில் நடிகர் அஜித் சொல்லவே வேண்டாம் தன்னை நம்பி ஒருவர்களுக்கு தன்னால் முடிந்த காசுகளையோ, உதவிகளையும் செய்து வருகிறார்..

அப்படி பல தகவல்கள் வெளிவந்த நாம் கேட்டு இருக்கிறோம்.. அப்படி ஒரு தரமான சம்பவத்தை தான் இப்பொழுது பார்க்க இருக்கிறோம் 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் அமர்க்களம் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் அஜித்தை சந்தித்து உதவி கேட்டுள்ளார். அஜித்தை சந்தித்த அவர் சொன்னது என்னவென்றால் என்னுடைய நண்பரின் மகனுக்கு இதயத்தில் ஒரு பிரச்சனை இருக்கிறது.

அதை சரி செய்ய வேண்டும் என்றால் உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை இருக்கிறது அதற்கு உதவி செய்ய முடியுமா என அஜித்திடம் கேட்டார் பொன்னம்பலம் உடனே அஜித் சம்பந்தப்பட்ட அந்த சிறுவனின் மருத்துவமனைக்கு பரிசோதனை, அறிக்கை, மருத்துவமனை பில் போன்ற அனைத்தையும் கேட்டு வாங்கி பார்த்தாராம்..

பிறகு உடனே அஜித் நடிக்க சென்று விட்டார். பொன்னம்பலத்திடம் அஜித் சொல்லாமல் சென்றாராம்.. ரொம்ப நேரம் பொன்னம்பலம் உட்கார்ந்து இருந்தாராம்.. ஷார்ட் முடிந்தவுடன் திரும்பிய அஜித் மீண்டும் படத்தில் நடிப்பது குறித்து விவாதம் நடத்தி இருக்கிறார்.  இதனால் பொன்னம்பலம் அஜித் மறந்து விட்டார் என நினைத்திருக்கிறார்.

கடைசியாக அஜித்திடம் ஒரு தடவைக்கு ஞாபகப்படுத்தி விடலாம் என போய் இருக்கிறார் அதற்கு அஜித் என்ன சார் இங்கே இருக்கிறீங்க.. நீங்கள் சொன்னவுடன் நான் மருத்துவமனை பில் அனைத்தையும் கட்டி விட்டேன் போய் பாருங்கள் என கூறி இருக்கிறாராம். இப்படி தன்னை நம்பி வருபவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment