ஷாலினி பேச்சை கேட்ட அஜித்..! பைக்கை தொடாததற்கு காரணம் இதுதானா.?

Ajith : திரையுலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் அதே தொழிலில் இருக்கும் நபர்களை கல்யாணம் செய்ய யோசிப்பார்கள் ஆனால் அஜித் ஷாலினியை அதற்கு எதிர் மாறாக உடையவர்கள். அமர்க்களம் படத்தின் போது காதல் வலுவானதால் படம் முடிந்த பிறகு இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன்  திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு ஷாலினி சினிமாவை நிப்பாட்டி விட்டு குடும்பத்தை பார்க்க அஜித் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தினார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து  இன்று உச்ச நட்சத்திரமாக வருகிறார். இப்போ மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

73 வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? அதிர்ந்த ரசிகர்கள்

இந்த நிலையில் பிரபல காமெடி நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் அஜித்- ஷாலினி பற்றி பேசி உள்ளார்.  பல படங்களில் அஜித் கமிட்டாகி இருந்ததாராம்.. அந்த சமயத்தில் அஜித் பைக் விபத்தில் சிக்கியதால்  படத்தின் தயாரிப்பாளர் பலரும் கொடுத்த அட்வான்ஸ் திருப்பி கேட்டனர். இதனால் அஜித்  கடன் பிரச்சனைகளை சந்தித்தாராம்.

ஒரு கட்டத்தில் நடிகை ஷாலினி அஜித்திடம் நமக்கு என்ன தொழில் தெரிகிறதோ அதில் தான் கவனம் செலுத்த வேண்டும் என சொல்ல.. அதை அஜித்தும் நன்கு புரிந்து கொண்டு  நடிப்பில் முழு கவனம் செலுத்தினாராம்.  அதன் பிறகு அஜித்  பைக் தொடவே வில்லை.. தொடர்ந்து நடித்தார் அந்த படங்கள் வெற்றி பெற அவருடைய சம்பளம் உயர்ந்து.

மகளை ஒதுக்கிவைத்தாலும் மாமனாரை வாழ்த்திய தனுஷ்.! என்ன சொன்னார் பார்த்தீர்களா..

தற்பொழுது நடிகர் அஜித்குமார் ஒரு படத்திற்கு சுமார் 60 கோடியில் இருந்து 100 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அஜித் எப்பொழுதெல்லாம் துவண்டு கிடக்கிறார்களோ அப்பொழுது ஷாலினி அவருக்கு பக்கபலமாக இருந்து அஜித்தை தூக்கி விட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.